News November 15, 2024
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவை 1 மாதம் நிறுத்தம்

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை, அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக INDSRI FERRY SERVICES PVT LTD வெளியிட்டுள்ள அறிவிப்பில், வானிலை காரணமாக நவ.19 – டிச.18 வரை, பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாகை – காங்கேசன்துறை இடையே நவ.15-18ஆம் தேதி வரை, கப்பல் சேவை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
ராஜஸ்தான் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாகவும், சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தானில் Pre-KG, LKG, UKG வகுப்புகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாம். இதற்கு NCERT மற்றும் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இது நடைமுறைக்கு வரும். உங்கள் கருத்து என்ன?
News August 16, 2025
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் காலமானார்

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் (62) உடல்நலக்குறைவால் காலமானார். ஆக.2 ஆம் தேதி குளியலறையில் விழுந்ததால் சோரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், அவரின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
2026 தேர்தல்: திமுக ஆட்சியால் விசிகவுக்கு பின்னடைவா?

2021 வரை அதிமுக (மாநிலம்), பாஜகவுக்கு (மத்திய) எதிராக கடுமையான போராட்டங்களை விசிக முன்னெடுத்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகு வேங்கை வயல், கவின் ஆணவக்கொலை, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் உள்ளிட்டவற்றில் மென்மையான போக்கையே விசிக கடைபிடித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது 2026 தேர்தலில் விசிக களமிறங்கும் தொகுதிகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?