News March 18, 2024
நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ம. செல்வராசு போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை.செல்வராஜ்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவி வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நாகப்பட்டினம் 1.3 செ.மீ, திருப்பூண்டி 2.1 செ.மீ, வேளாங்கண்ணி 0.5 செ.மீ, திருக்குவளை 0.7 செ.மீ, தலைஞாயிறு 1.8 செ.மீ, வேதாரண்யம் 2.2 செ.மீ, கோடியக்கரை 3.3 செ.மீ என மாவட்ட முழுவதும் மொத்தமாக 12.1 செ.மீ மழையும், சராசரியாக 1.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 25, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, வரும் டிச.01-ம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
News November 25, 2025
நாகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பெரிய கந்தூரி விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, வரும் டிச.01-ம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.


