News March 17, 2024
அதிமுகவில் இணைந்தார் நாச்சியாள் சுகந்தி

இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News September 3, 2025
நீதிமன்றங்களில் AI பயன்பாடு?

பள்ளி மாணவர்களும் AI கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் உலகில் தான் தற்போது நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நீதித்துறையிலும் AI நுழைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட, அமர்வு நீதிமன்றங்களில் வரும் சிறிய வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக AI பயன்பாட்டை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிக வழக்குகளை கையாள முடியும். உங்கள் கருத்து என்ன?
News September 3, 2025
டைட்டில் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் ஆசிய கோப்பை

ஆன்லைன் கேமிங் ஒழுங்காற்று மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து Dream 11 உள்ளிட்ட நிறுவனங்கள், BCCI ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகின. இதனால் ஆசிய கோப்பை தொடருக்கான ஸ்பான்சர்ஷிப்பை தேடும் முயற்சியில் BCCI களமிறங்கியது. இருப்பினும், டி-ஷர்ட் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் இத்தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்பர் என தகவல் வெளியானது. இந்நிலையில், டைட்டில் ஸ்பான்சரும் கிடையாது என்றும் கூறப்படுகிறது.
News September 3, 2025
செப்டம்பர் 3: வரலாற்றில் இன்று

*1875 – முதலாவது அதிகாரப்பூர்வமான போலோ விளையாட்டு, அர்ஜென்டினாவில் விளையாடப்பட்டது.
*1951 – இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறந்தநாள்.
*1958 – தமிழ் மொழி சிறப்பு அமலாக்க சட்டமூலம், இலங்கையின் மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*1967 – ஸ்வீடனில், இடது பக்க வாகன ஓட்டம் வலப்பக்கமாக ஒரே இரவில் மாற்றப்பட்டது. *1992 – இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பிறந்தநாள்.


