News September 30, 2025

முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

image

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 30, 2025

கரூர் சென்ற பாஜக MPக்கள் கார் விபத்தில் சிக்கியது

image

கரூர் விபத்து குறித்து ஆய்வு செய்ய பாஜக நியமித்த ஹேமமாலினி தலைமையில் MP-க்கள் குழு, டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் வழியில் அவர்களது கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. ஆனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் அதே கார்களில் கரூர் புறப்பட்டு சென்றனர்.

News September 30, 2025

B.Ed, M.Ed மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

image

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல் கட்ட கலந்தாய்விற்கு பின் அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இங்கே <>கிளிக் <<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News September 30, 2025

Windows 10 யூஸ் பண்றீங்களா.. இத கவனியுங்க!

image

அக்டோபர் 14-ம் தேதியுடன், Windows 10 OS-க்கு வழங்கிய Backend Support-ஐ நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இனி பயனர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட், technical support போன்ற சேவைகள் நிறுத்தப்படும். ஜூலை 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட Windows 10, 140 கோடி கணினிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், Windows 11 OS-க்கு மாறும் படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!