News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திருப்பூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
அவிநாசி அருகே விபத்து: 12 பேர் காயம்

சேலத்தைச் சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்களுடன், சபரிமலைக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு திருப்பூர் அவிநாசி அருகே வந்த போது இடதுபுற பின் பக்க டயர் வெடித்ததில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. இதில், 12 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் மத்திய போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு கந்தசாமி மற்றும் சிங்கராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
News November 24, 2025
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பூர் மாநகரத்துக்கு உட்பட்ட சுண்டமேடு மற்றும் மும்மூர்த்தி நகர் பகுதிகளில் உள்ள மதுபான கடை அருகே சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட சரவணன் மற்றும் கிரிநாத் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.


