News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திருப்பூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News November 14, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகரில் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் ஜெயபாலன் தலைமையில் கொங்கு நகர் மற்றும் அனுப்பர்பாளையம் சரகத்திலும், சேகர் மற்றும் ஜான் ஆகியோர் தலைமையில் நல்லூர் மற்றும் கே வி ஆர் நகர் சரகத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News November 13, 2025
திருப்பூர் இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் மற்றும் அவினாசி பகுதிகளில், இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றம் அல்லது அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும். அவசர உதவிக்காக 108 ஐ அழைக்கவும்.
News November 13, 2025
திருப்பூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


