News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். நீலகிரியில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News December 15, 2025
நீலகிரி: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

நீலகிரி மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News December 15, 2025
நீலகிரியில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்!

நீலகிரி மாவட்டம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.16), மஞ்சூர், கீழ் குந்தா, இரியசீகை, பெங்கால் மட்டம், மஞ்சக்கோம்பை, பிக்கட்டி, கோட்டக்கல் முக்கிமலை, எடக்காடு, காயகண்டி, கோரகுந்தா, ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
நீலகிரி மக்களே அரிய வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் அல்லது சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு தேவையான கடன் வழங்கும் வகையில் கடன் வழிகாட்டுதல் முகாம் தமிழக அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம் (18/12/25) காலை 10 மணி அளவில் சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள தோட்டகலை கூட்ட அரங்கில் நடைபெறும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.


