News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். நாமக்கல்லில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
Similar News
News December 13, 2025
நாமக்கல்: வாக்காளர் திருத்த படிவம் கடைசி தேதி!

நாமக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட SIR வாக்காளர் திருத்த படிவங்களை சமர்ப்பிக்க டிச.11ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் படிவங்களை சமர்ப்பிக்க டிச.14ந் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவரை படிவங்களை சமர்ப்பிக்காத நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
News December 13, 2025
நாமக்கல்: நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.13) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138) ,வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), பள்ளிபாளையம் – (வெங்கடாசலம் – 9597406752) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 13, 2025
BREAKING: நாமக்கல்லில் புதிய உச்சம் தொட்ட விலை!

நாமக்கல்: முட்டை பண்ணை கொள்முதல் விலை இன்று (டிச.13) ரூ.6.20 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முட்டை விலை ரூ.6.15 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிகளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. முட்டை தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளதால் விலை உயர்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


