News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். ஈரோட்டில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

Similar News

News November 23, 2025

கோபி அருகே வசமாக நபர்: அதிரடி கைது

image

கோபி மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் பர்கூர் தட்டக்கரை பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கௌரிசங்கர் (32) மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News November 23, 2025

ஈரோடு: 10வது படித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுப்பிரிவில் பல்நோக்கு ஊழியர் (Multi Tasking Staff) பதவியில் மொத்தம் 362 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 14.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க

News November 23, 2025

ஈரோடு: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ஈரோடு மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க.

error: Content is protected !!