News October 18, 2025
மாநகராட்சி முறைகேட்டில் மர்மம் நீடிக்கிறது: நயினார்

மதுரை மாநகராட்சி முறைகேட்டில் சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, நெல்லை, மதுரை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது, திமுகவின் நிர்வாக தோல்வியை காட்டுவதாக கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து CBI விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
தீபாவளி விடுமுறை.. மேலும் ஒரு ஹேப்பி நியூஸ்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், பலர் பேருந்து கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான ராகி அல்வா!

➤தேவையானவை: கேழ்வரகு, நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணெய், முந்திரி, ஏலக்காய் தூள், நெய் ➤செய்முறை: நெய்யில் முந்திரியை வறுத்து கொள்ளவும். அடுத்து, கேழ்வரகில் தண்ணீர் ஊற்றி, மாவு பதத்திற்கு கொண்டு வரவும். பிறகு, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிக் கொண்டே தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இதில், வறுத்த முந்திரியை சேர்த்தால், சுவையான கேழ்வரகு அல்வா ரெடி. இந்த தீபாவளிக்கு இத பண்ணி அசத்துங்க.
News October 18, 2025
ஷமி ஏன் அணியில் இடம்பெறவில்லை?

ஷமி ஃபிட்டாக இருந்திருந்தால், இந்நேரம் ஆஸி.,க்கு எதிரான தொடரில் அணியில் இடம் பிடித்திருப்பார் என தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தெரிவித்துள்ளார்.
வீரர்கள் எப்போதும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், கடந்த காலங்களில் ஷமியுடன் பல முறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஃபிட்னஸ் குறித்து வீரர்களிடம் பேச வேண்டியது தேர்வுக்குழுவின் கடமை என <<18008638>>ஷமி<<>> தெரிவித்து இருந்தார்.