News April 17, 2025
காங்., தலைவர்களின் மர்ம மரணங்கள்.. அரசுக்கு நெருக்கடி!

காங்கிரஸ் நிர்வாகிகளின் மர்ம மரணங்கள் அரசுக்கு புது நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். கடந்தாண்டு மே 4-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் கருகிய நிலையில், சடலமாகக் கிடந்தார். இந்நிலையில், நேற்று நீலகிரி காங்., தலைவர் <<16113595>>ராஜ்குமார்<<>> மர்மமான முறையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 8, 2025
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

<<17648092>>TET தேர்வுக்கு<<>> விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்தது. ஆனால், பிற்பகல் முதலே சர்வர் பிரச்னை இருந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்தனர். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT
News September 8, 2025
சற்றுமுன்: RB உதயகுமாரின் தாய் காலமானார்

அதிமுக Ex அமைச்சர் RB உதயகுமாரின் தாய் மீனாள்(74) காலமானார். உடல்நலக் குறைவால் நீண்ட நாள்களாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது. மீனாளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள EPS, அவரது ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News September 8, 2025
செங்கோட்டையனுக்கு ByeBye… அந்தர் பல்டி அடித்த MLA

கடந்த ஒருவாரமாக செங்கோட்டையனுடன் கூடவே இருந்த பவானி MLA பண்ணாரி, திடீர் திருப்பமாக EPS-க்கு ஆதரவு அளித்துள்ளார். செங்கோட்டையன், உள்ளிட்ட 9 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை பண்ணாரி சற்றுமுன் சந்தித்தார். அதன்பின் அவர் பேசுகையில், இயக்கம் தான் பெரியது, தனிநபர் அல்ல; EPS-க்கு துணை நிற்போம் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.