News April 8, 2025

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

image

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.

Similar News

News November 4, 2025

கோவை கல்லூரி மாணவி வழக்கில் அடுத்த அதிர்ச்சி

image

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் சுட்டுப்பிடித்த 3 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் மூவரும் ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது கோவை கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

News November 4, 2025

வறட்டு இருமலை சட்டென விரட்டும் கசாயம்!

image

✱தேவை: மூங்கில் உப்பு, கூகை நீறு, இலவங்கப்பட்டை பொடி, சீந்தில் சர்க்கரை, மாதுளம் பூ, கற்கண்டு, ஏந்தல் அரிசி பொடி, திப்பிலி ✱செய்முறை: தண்ணீரில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் போட்டு, 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து, வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடிக்கவும். சர்க்கரை நோயாளிகள் கற்கண்டு சேர்க்க வேண்டாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News November 4, 2025

DMK அதிகாரத்துக்கு பயப்படும் அரசியல் கட்சிகள்: G.K.வாசன்

image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவதை வாக்காளர்களே ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று G.K.வாசன் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரத்துக்கு பயந்தே SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றுள்ளனர் என சாடினார். மேலும், முறையாக தேர்தல் நடத்த கோட்பாடுகளை வழங்கும் தேர்தல் ஆணையத்தை தோல்வி பயத்தால் ஆளும் திமுக எதிர்க்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!