News April 8, 2025
மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.
Similar News
News January 4, 2026
தங்கம் விலை சவரன் ₹1,00,800

தங்கம் விலை இன்று (ஜன.4) மாற்றமின்றி காணப்படுகிறது. நேற்று காலை 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்த நிலையில், மாலையில் ₹80 அதிகரித்தது. இதனால் கிராம் ₹12,600-க்கும், சவரன் ₹1,00,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் உயர்ந்ததால் இன்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், விலையில் மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News January 4, 2026
T20I WC போட்டிகள்: இந்தியாவில் இருந்து மாத்துங்க..

வங்கதேசத்தில் இந்து ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, IPL தொடரிலிருந்து வங்கதேச வீரர் <<18757649>>முஸ்தபிசுர் ரஹ்மான்<<>> நீக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா, மும்பையில் நடைபெறும் தங்களது மேட்ச்களை இலங்கைக்கு மாற்ற வங்கதேச அணி, ICC-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது வீரர்களின் பாதுகாப்பை கருதி இந்த முடிவு எனவும் கூறப்படுகிறது.
News January 4, 2026
சற்றுமுன்: அதிமுகவில் அடுத்த பதவி பறிப்பு

அதிமுக வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணமோசடி, அடிதடி என இவர்மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததன் காரணமாக மா.செ., பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் திருமங்கலம் மோகனை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ததோடு, வி.எஸ்.பாபுவை அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக மாற்றி EPS உத்தரவிட்டுள்ளார்.


