News April 8, 2025
மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலி 3,600ஆக அதிகரிப்பு

மியான்மர் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3,600ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 28-ல் நேரிட்ட நிலநடுக்கத்தால் மியான்மரில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தொடர்ந்து பலியாகி வருவதால் பலி அதிகரித்தபடி உள்ளது. தற்போது 5,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 160 பேரை காணவில்லை. இதனால் பலி மேலும் உயரக்கூடும்.
Similar News
News April 23, 2025
GBU விவகாரம்.. அப்பா சொன்னது பொய்: பிரேம்ஜி

‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவின் பாட்டால் தான் ஓடியது என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது வைரலானது. ஆனால், அதை மறுத்துள்ள அவரது மகன் பிரேம்ஜி, அனைவருக்குமே உண்மை தெரியும் எனவும், அஜித்தின் படம் அஜித்தால் மட்டுமே ஓடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பது போன்று, எனது அப்பாவும் அவருடைய அண்ணனுக்காக குரல் கொடுத்ததாக பிரேம்ஜி கூறியுள்ளார்.
News April 23, 2025
BREAKING: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 23, 2025
முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்?

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.