News April 1, 2025
மியான்மர் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,719ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,719ஆக உயர்ந்துள்ளது. மேலும் 441 பேரை காணவில்லை. இதேபோல், 4,500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News April 2, 2025
அதிமுக – பாஜக மீண்டும் மீண்டும் சந்திப்பு

பாஜக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் அவ்வப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லியில் அமித் ஷாவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்தார். அதேபோல, நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்து பேசினார். கடந்த வாரம் EPS அமித் ஷாவை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
எந்த நேரம், எதற்கு நல்லது?

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம். *5am-7am:பெருங்குடல் நச்சுநீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். ரிலாக்ஸாக இருங்கள்.
News April 2, 2025
ராமரை பாடிக் கொண்டே உயிரை விட்ட பிரபலம்

தமிழில் கம்பராமாயணம் போல், ஹிந்தியில் ராமரின் வரலாற்றை சொல்வது துளிசிதாசரின் ராம சரித மானஸ். இதுபற்றி சொற்பொழிவு ஆற்றுவதில் பிரபலமானவர் ஒடிசாவை சேர்ந்த பேரா.கோபால் பிரசாத் பேஜ். சப்ரங் என்ற இடத்தில் கோயில் திருவிழாவில் 3 நாள் சொற்பொழிவு நிகழ்த்த சென்ற கோபால் பிரசாத், 2-ம் நாளில் மேடையில் ராமரின் புகழைப் பேசிக் கொண்டிருந்தபோதே, சுருண்டு விழுந்து இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.