News March 20, 2025
என் பேச்சை சரியாக புரிந்து கொள்ளவில்லை: வேல்முருகன்

தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல் அவையில் பேசுவதாக தவாக தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சை அமைச்சர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் வரை தவறாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்றே தான் பேசியதாக விளக்கமளித்தார். மேலும், <<15824134>>சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும்<<>>, அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 21, 2025
ஆப்ரிக்காவில் பசிப்பிணித் தீர்த்த யூடியூபர்!

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் MR.Beast–க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோகோ பண்ணைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக, காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளியில் ஒன்றில் முதல் வாரத்திலேயே 10% உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 21, 2025
தங்கம் தென்னரசு பேச்சால் அவையில் அமளி!

அதிமுகவை பாஜக கைப்பற்ற துடிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அதற்கு வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரைக்கு பின் பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். அதிருப்தியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
News March 21, 2025
பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. சிக்கிய தம்பதி!

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸில் சிக்கியுள்ளனர். 2014இல் கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் 16 பேருக்கு 2019இல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ், தமிழரசி தம்பதி வசமாக சிக்கியுள்ளனர்.