News October 24, 2024

அஜீரணப் பிரச்னையை விரட்டி அடிக்கும் கடுக்காய் தேநீர்

image

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு, புளி ஏப்பம் போன்ற செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற கடுக்காய் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கடுக்காய், சுக்கு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை பொடித்து நீரில் கலந்து, கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கடுக்காய் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

Similar News

News November 28, 2025

கொலஸ்ட்ரால் பிரச்னை வரக்கூடாதா? இத பண்ணுங்க

image

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எண்ணெயும் சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஆலிவ் ஆயில்: ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்திருக்கிறதாம். நல்லெண்ணெய்: இதய நோயாளிகள் மற்றும் உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு சிறந்ததாம். கடலை எண்ணெய்: வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

News November 28, 2025

BREAKING: திமுக அமைச்சர் விடுவிப்பு

image

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், வருவாய்க்கு அதிகமாக ₹1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது. இதில் அவரது தாயார், மனைவி, மகன், மைத்துனர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாக கூறி, இவ்வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் ரத்து செய்துள்ளது.

News November 28, 2025

உள்வாங்கும் சென்னை.. காத்திருக்கும் ஆபத்து

image

ஜனத்தொகை, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நிலம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015-2023 வரையிலான சாட்டிலைட் படங்களை ஆராய்ந்ததில் சென்னையில் 30 மி.மீ அளவிற்கு நிலங்கள் உள்வாங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் அடையார், தண்டையார்பேட்டை, வளசரவாக்கத்தில் நிலம் உள்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!