News June 17, 2024
சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் முருகன்

முருகப் பெருமான், சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து, சாந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி. சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணிகை என இந்த தலம் அழைக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் இருப்பது போல் இங்குள்ள முருகன் சிலையில் வேல் இருப்பது இல்லை. அலங்காரம் செய்யும் போது மட்டும் வேல் சாற்றப்படுகிறது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் முருகன் கையில் வேல் கிடையாது.
Similar News
News November 14, 2025
காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது: அஜய் தேவ்கன்

இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் ‘LOVE’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக நடிகர் அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். இதனால், காதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதாகவும், காதலின் உண்மையான அர்த்தம், அந்த சொல்லின் ஆழம் இளம் தலைமுறையினருக்கு புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அவரது மனைவி <<18272316>>கஜோல்<<>>, திருமணத்திற்கு Expiray Date மற்றும் Renewal ஆப்ஷன் வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
News November 14, 2025
யோசித்து கூட பார்க்காத வகையில் தண்டனை: அமித்ஷா

டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இனி இது போன்ற சம்பவத்தை செய்ய வேண்டும் என யாரும் எண்ணாத வகையில், அந்த தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்தும் செய்தியாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி: தேஜஸ்வி

பிஹாரில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி நடப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் வெற்றியை அறிவிப்பதை தாமதப்படுத்தி, NDA கூட்டணி வெற்றியை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


