News March 26, 2024
முருகன், ஜெயக்குமார் இலங்கை செல்ல பாஸ்போர்ட்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் கூறியுள்ளது. மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அனுமதி கிடைத்த ஒரு வாரத்தில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து, முருகன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Similar News
News December 26, 2025
3 ஆண்டுகளாகியும் கிடைக்காத வேங்கைவயல் நீதி!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் 2022 டிச.26 அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது உறுதியாக தெரியாமல், நீதி கிடைப்பதில் தாமதம் நீடிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் திமுகவிற்கு பெரும் நெருக்கடியாக மாற வாய்ப்புள்ளது.
News December 26, 2025
நடிகை மீனாவின் மகள் ‘தெறி’ பேபியின் NEW PHOTO

நடிகை மீனா தனது மகள் நைனிகாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நைனிகா, 5 வயதில் விஜய்யின் ‘தெறி’ படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பல ஆண்டுகளாக வெளியுலகத்தின் கண்ணில் படாமல் இருந்த நைனிகாவுக்கு தற்போது 14 வயதாகிறது. அடடே! அடையாளமே தெரியலையே இது நைனிகாவா? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 26, 2025
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: PM

2025-ல் NDA ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை அனைவரையும் சென்றடைந்து, அவர்களின் வாழ்வை எளிதாக்கியுள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். எளிய வரி சட்டங்கள், திருத்தங்கள், நவீன தொழிலாளர் சட்டங்கள், எதற்கும் விரைவான தீர்வு என மக்களின் வாழ்க்கையை இந்த ஆட்சி மேம்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். வரும் காலங்களில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் வீரியத்துடன் தொடரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


