News March 30, 2024

‘பாரத ரத்னா’ விருது வழங்குகிறார் முர்மு

image

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்க உள்ளார். இந்த ஆண்டு 5 பேருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதில், பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News October 29, 2025

பாஜக ஆளும் அசாமில் SIR நடக்காதது ஏன்? பின்னணி!

image

நாடு முழுவதும் நடக்கும் SIR நடவடிக்கையில் இருந்து அசாமுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன் தெரியுமா? அசாமில் ஏற்கெனவே NRC என்கிற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை நடந்துள்ளது. இதனால் அங்கு தற்போதைக்கு SIR நடவடிக்கை தேவை இல்லை என கருதப்படுகிறது. அத்துடன், மற்ற பகுதிகளை விட அசாமின் குடியுரிமை விதிகள் மாறுபட்டது. எனவே இதற்கு தனியாக வரையறைகளை அமைத்து, SIR நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

News October 29, 2025

இறந்தவரின் விரலை வைத்து போனை Unlock செய்யமுடியுமா?

image

இறந்தவரின் விரலை வைத்து அவரது ஃபோனை Unlock செய்யமுடியாது. தற்போதுள்ள போன்களின் சென்சார்களின் Liveness Detection பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது ஒரு நபர் போனை Unlock செய்யும்போது, அவரது விரலில் உள்ள ஈரப்பதம், ரத்த ஓட்டம், வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இறந்தவரின் உடலில் இது இருக்காது என்பதால், அவரது ஃபோனை Unlock செய்வது சிரமம் என்கின்றனர். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 29, 2025

திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல்: EPS

image

நகராட்சி நிர்வாகத்துறை <<18140241>>பணி நியமனத்தில்<<>> நடந்த ஊழல் தொடர்பாக, பொறுப்பு DGP வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். CM ஸ்டாலின் போலீஸ் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும் எனவும், இளைஞர்களின் அரசுப்பணி கனவை, தங்கள் கமிஷன் கொள்ளைக்காக திமுக அரசு சிதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்த திமுக ஆட்சியில் எங்கும் ஊழல் – எதிலும் ஊழல் நடந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!