News March 30, 2024
‘பாரத ரத்னா’ விருது வழங்குகிறார் முர்மு

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்க உள்ளார். இந்த ஆண்டு 5 பேருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதில், பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Similar News
News January 20, 2026
மீண்டும் கர்ப்பமானார் நடிகை பிரியா அட்லீ ❤️❤️ PHOTOS

இந்திய திரையுலகில் பேமஸ் கப்பிளாக இருக்கும் இயக்குநர் அட்லீ – நடிகை பிரியா தங்களுடைய 2-வது குழந்தையை வரவேற்க தயாராக உள்ளனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு, 2023-ல் முதல் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாகிய தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரியா, தங்கள் குடும்பத்திற்கு புதிதாக ஒருவர் வரப்போகிறார், இதனால் தங்கள் வீடும் குடும்பமும் அழகாக மாறப்போகிறது என பதிவிட்டுள்ளார்.
News January 20, 2026
Ro-Ko-வுக்கு ஷாக் கொடுக்கவுள்ள BCCI?

A+,A,B,C போன்ற பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு BCCI சம்பளம் வழங்கி வருகிறது. தற்போது, A+ பிரிவை நீக்க BCCI ஆலோசித்து வருவதால், ரோஹித் & கோலி ஆகியோர் B பிரிவுக்கு தள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A பிரிவில் இடமளிக்கப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
தேசிய கீதம் இசைப்பதில் என்ன பிரச்னை? வானதி

கவர்னர் விவகாரத்தில் திமுக அரசு ஆதிக்க மனப்பான்மையையோடு நடப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதில் திமுகவுக்கு ஏன் பிடிவாதம் என கேட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் சம மரியாதை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.


