News March 19, 2025

கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை: CM ஸ்டாலின் உறுதி

image

நெல்லையில் ஓய்வு பெற்ற SI ஜாகிர் உசேன் கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், கொலை செய்யப்படுவதற்கு நிலப் பிரச்சனையே காரணம் என்றும், கொலைக்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோ குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News March 19, 2025

சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

image

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

News March 19, 2025

எம்.சான்ட் விலை உயர்வு… வீடு கட்டும் செலவு அதிகரிக்கும்

image

விலை உயராத பொருளே இருக்காது போல. தற்போது எம்.சான்ட், பி.சான்ட் விலைகள் உயர்ந்துள்ளன. 1 டன் எம்.சான்ட் ₹650இல் இருந்து ₹1,250ஆகவும், பி.சான்ட் ₹750இல் இருந்து ₹1,500ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லாரி எம்.சான்ட் (6 unit) ₹55,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், வீடு கட்டும் செலவு 1 சதுர அடிக்கு ₹100 அதிகரிக்கும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு காேரிக்கை எழுந்துள்ளது.

News March 19, 2025

TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

image

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!