News May 23, 2024
மோடிக்கு உதவவே பல கட்ட தேர்தல்: மம்தா

மோடி இன்னும் சில நாள்களில் முன்னாள் பிரதமராக மாறி விடுவார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மோடிக்கு உதவுவதற்காக தேர்தல் பல கட்டமாக நடத்தப்படுவதாகவும், கடந்த 2 மாதங்களாக நாட்டில் பிரசாரத்தை தவிர வேறு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். வெப்பமான சூழலிலும் தேர்தல் ஆணையம் பல கட்ட தேர்தலை நடத்துவதாக அவர் விமர்சித்தார்.
Similar News
News March 11, 2026
வாயால் பறிபோன ₹25 லட்சம் தங்க நகைகள்!

எங்கு, எதை பேச வேண்டும் என்பதை அறிவது அவசியம். 3 நாள்கள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தினர், நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ந்துள்ளனர். Cab-ல் செல்லும் போது, நகை இருந்த அலமாரி பற்றி அவர்கள் பேசிக் கொண்டே சென்றுள்ளனர். இதனை கவனித்த Cab டிரைவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். பிறகு போலீசார் விசாரித்து ₹25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
News March 11, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 11, 2026
நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

‘பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான கோரைப் பாயில் படுப்பது ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு & இடுப்பு வலி வராது. மேலும், பாயில் சமமாகப் படுக்கும்போது உடலில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இத்துடன், கோரைப் பாய் சூட்டை உள்வாங்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.


