News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 22, 2025
₹3,800 கோடியில் பாஜகவிற்கு மட்டும் ₹3,100 கோடி!

2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் ₹3,811 கோடி அளவிற்கு நன்கொடை பெற்றுள்ளன. நாடு முழுவதும் 9 தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் இவை வசூலிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக மட்டும் ₹3,112 கோடி (82%) நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் ₹299 கோடி (8%), மற்ற கட்சிகள் ₹400 கோடி (10%) பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் தேர்தல் பத்திரங்களை SC தடை செய்த நிலையில், தற்போது ₹1,218 கோடி அதிக நன்கொடை பெறப்பட்டுள்ளது.
News December 22, 2025
ராசி பலன்கள் (22.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 22, 2025
அப்பாவான இந்திய அணியின் ஆல்ரவுண்டர்

இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்த அவர், இதற்காக தான் 9 மாதங்களாக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஷர்துல் கடந்த 27 பிப்ரவரி 2023-ல் மிதாலி பருல்கர் என்பவரை திருமணம் செய்தார். தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.


