News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 21, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை மற்றும் கடின உழைப்பு.
*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது.
*ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும்.
*ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் வளர்க்கப்படும் ஒரு யோசனையும் தொடங்குகிறது.
News December 21, 2025
தெலங்கானாவிலும் வெறுப்பு பேச்சு எதிர்ப்பு சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிரான சட்டத்தை விரைவில் தெலங்கானாவில் கொண்டு வருவோம் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த அரசு, ஒருவரின் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும், ஒவ்வொரு மதத்திற்கும் சம உரிமைகளையும் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழகத்திலும் கொண்டு வரலாமா?
News December 21, 2025
மீண்டும் தெலுங்கில் ரீரிலீஸாகும் தனுஷின் 3

2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் 2026, பிப்.6-ல் தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2022-ல் தெலுங்கிலும், 2024-ல் தமிழிலும் இப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதனால், ஒரு படம் 3-வது முறையாக ரீரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். உங்களுக்கு இப்படத்தில் பிடித்த சீன் எது?


