News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News February 3, 2026

அரிதிலும் அரிது.. நீங்கள் காணாத உலக அதிசயம்

image

வெவ்வேறு விளையாட்டுகளின் உலகக் கோப்பை தொடர்களில் ஆடிய 3-வது நபர் என்ற பெருமையை இத்தாலியின் வெய்ன் மேட்சன் பெற்றுள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்க அணிக்காக ஹாக்கி உலகக் கோப்பையில் ஆடிய இவர், தற்போது டி20 WC-ல் இத்தாலியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இதற்கு முன்பாக ரூடி வான் ( ரக்பி + கிரிக்கெட் ) மற்றும் எல்லிஸ் பெர்ரி ( கால்பந்து + கிரிக்கெட் ) உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கின்றனர்.

News February 3, 2026

திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிப்பு: பாஜக

image

திமுகவின் ஆட்சியில் TN-ல் ரவுடியிசமும், வன்முறைகளும் அதிகரித்துவிட்டதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், தேனி மற்றும் ஓசூரில் பட்டப்பகலில் நடந்த குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியது தான் திராவிட மாடல் ஆட்சியா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 3, 2026

JEE 2-ம் கட்ட தேர்வு.. மாணவர்கள் கவனத்திற்கு

image

பொறியியல் படிப்புகளுக்கான JEE 2-ம் கட்ட தேர்வு ஏப்.1 தொடங்கி ஏப்.9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், விருப்பமுள்ள மாணவர்கள் பிப்.25-க்குள் jeemain.nta.nic.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் தேசிய தேர்வு முகமை என தெரிவித்துள்ளது. JEE மெயின் தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதிய நிலையில், வரும் பிப்.12-ல் முடிவுகள் வெளியாகின்றன.

error: Content is protected !!