News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 26, 2026
குடியரசு தின அணிவகுப்பில் பெண்களின் சாதனை

குடியரசு தின அணிவகுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் படிப்படியாக இடம்பெற தொடங்கி உள்ளனர். பெண்கள் அணிவகுப்பு நடத்தியது மட்டுமின்றி, சாகசங்களும் செய்து அசத்தினர். பெண்களின் அணிவகுப்பு நாட்டில் பெண்களுக்கான உரிமையை பிரதிபலிக்கும் வகையில் அமைகிறது. எந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 26, 2026
SHOCKING.. தங்கம் விலை தடாலடியாக மாறியது

2026-ம் ஆண்டின் முதல் மாதமே முடியவில்லை. அதற்குள் தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2026 ஜன.1 அன்று, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹99,040 ஆக இருந்தது. ஆனால், இன்று சவரன் ₹1,20,200 ஆக வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், வெள்ளி கிலோவுக்கு ₹1.47 லட்சம் உயர்ந்து ₹3.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. தங்கம், வெள்ளி இறங்குமுகம் காணுமா?
News January 26, 2026
வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி

தேசிய கீதம் போல வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதியை கொண்டு வருவதற்கு உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 1971-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டமானது தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே, வந்தே மாதரம் பாடலுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.


