News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 19, 2026
நிபா வைரஸ்: தமிழக அரசு எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 19, 2026
நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது: கில்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தாங்கள் விளையாடிய விதம் சற்று ஏமாற்றமளித்தாக இந்திய கேப்டன் கில் கூறியுள்ளார். நாங்கள் சில விஷயங்களை சிந்தித்து மேம்படுத்த வேண்டும் என்று பேசிய கில், விராட் கோலி மற்றும் 8-வது இடத்தில் கலக்கிய ஹர்ஷித் ஆகியோரின் பேட்டிங்கை பாராட்டினார். மேலும், இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
News January 19, 2026
ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 50,98,474 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 63,25,211-ஐ இது 24.1% அதிகம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வாகனங்களில் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவற்றில், மாருதி சுசுகி 3.95 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.


