News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 17, 2025
அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், A7 ஆக <<18544051>>DSP<<>> சண்முகசுந்தரம் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதன் மீதான விசாரணையின் போது, DSP சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கவுள்ளதாக CBI கூறியுள்ளது. இதனால், விரைவில் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 17, 2025
IND vs SA: இன்று போட்டி நடக்குமா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. ஆனால், அங்கு அதீத பனிமூட்டம் இருப்பதால், போட்டி தொடங்குவது தாமதமாகி வருகிறது. 7:30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த பிறகு, இன்றைய போட்டி நடக்குமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்த போட்டி ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
News December 17, 2025
எந்த பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?

அன்றாடம் நம் உணவுகளின் பழங்களை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும். ஆனால், ஒவ்வொரு பழத்தையும், அதனை சரியாக காலை – ஆற்றலுக்கும், மதியம் – செரிமானத்துக்கும், இரவு – நல்ல தூக்கத்திற்கும் சாப்பிட வேண்டும். அதன்படி, எந்தெந்த பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டால் சிறந்தது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


