News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News December 16, 2025

ஏப்ரலில் சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

image

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கும் படத்திற்கு, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என பெயரிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படத்தை, 2026 ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதே மாதத்தில் ‘கருப்பு’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரே மாதத்தில் 2 சூர்யா படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

News December 16, 2025

டாடா கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி

image

டாடா கார்களுக்கு டிசம்பர் 31-ம் வரை ஆண்டு இறுதி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, Altroz 2025 சலுகை-₹25,000 வரை, Altroz சலுகை-₹1,50,000 வரை, Altroz Racer சலுகை-₹1,85,000 வரை, Punch சலுகை-₹75,000 வரை, Harrier சலுகை-₹1,00,000 வரை, Safari சலுகை-₹1,00,000 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Altroz 2025-ஐ தவிர மற்ற சலுகைகள் அனைத்தும் 2024 மாடல் கார்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

News December 16, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து போராட்டம்: திருமா

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தங்களுக்கு வேண்டிய நீதிபதியை வைத்து மதவெறி கும்பல் பிரச்னையை கிளப்பியுள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். RSS, பாஜக ஆதரவு நபர்களை நீதிபதிகளாக நியமித்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்புகளை மோடி அரசு வழங்க செய்கிறது. எனவே, கொலிஜியம் முறையை மாற்றவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்தும் வரும் 22-ல் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!