News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 31, 2025
உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ வரவேற்ற கிரிபாட்டி!

உலகிலேயே முதலாவதாக கிரிபாட்டி நாட்டின் கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் 7,500 மக்கள் வசிக்கின்றனர். இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தின் சில பகுதிகளிலும் விரைவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தியா அடுத்த 8:30 மணி நேரத்தில் 2026-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ளது.
News December 31, 2025
6 மணி நேரத்தில் ₹2,000.. Incentive வாரி வழங்கும் நிறுவனங்கள்!

வேலை நேரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெலிவரி ஏஜெண்ட்கள் இன்று பந்த் அறிவித்துள்ளனர். ஆனால், புத்தாண்டு இரவில் ஆர்டர்கள் அதிகம் வரும் என்பதால், டெலிவரி நிறுவனங்கள் ஏஜெண்ட்களுக்கு Incentive அறிவித்துள்ளன. இன்று 6 PM – 12 AM வரை ஒவ்வொரு ஆர்டருக்கும் ₹120 – ₹150 என ஒரு நாளில் ₹3,000 வழங்குவதாக ZOMATO-வும், 6 மணி நேரத்திற்கு ₹2,000 வழங்குவதாக Swiggy-யும் தெரிவித்துள்ளன.
News December 31, 2025
பள்ளிகள் திறப்பு.. மாணவர்களுக்கு மகிழ்ச்சி

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளே 3-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் & நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புத்தகங்கள் வழங்கப்பட்ட பிறகு அவற்றை ‘Emis’ தளத்தில் பதிவேற்றவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


