News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 28, 2025
BREAKING: நல்லகண்ணு மீண்டும் ICU-வில் அனுமதி

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்புதான் 101 வயதை அவர் எட்டினார். ஏற்கனவே நுரையீரல் தொற்று ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 28, 2025
பெரிய PDF-களை படிக்க கஷ்டமா இருக்கா? இதோ Solution

மாணவர்களே, பெரிய பெரிய PDF-களை படிக்க நேரமே இல்லையா? உங்களுக்காகவே ‘ChatPDF’ என்ற AI Tool இருக்கிறது. இந்த AI Tool-ல் உங்கள் PDF-ஐ அப்லோட் செய்தால் போதும். உங்களுக்கு பதில் அதுவே முழு PDF-ஐ படித்து முடித்துவிடும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை பற்றி அதனிடம் கேள்வியாக கேளுங்கள். அது, PDF-ல் இருக்கும் பதில்களையும், அதற்கான விளக்கத்தையும் அளிக்கும். மாணவர்கள் படிப்புக்கு உதவும், SHARE.
News December 28, 2025
அதிமுகவில் இருந்து நீக்கம்.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX MLA-வுமான பல்பாக்கி சி.கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் EPS நீக்கியுள்ளார். சி.கிருஷ்ணன், சேலம் புறநகர் மாவட்ட MGR மன்றச் செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளார். 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனது கோட்டையில் இருந்தே முக்கிய நிர்வாகியை நீக்கி EPS அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


