News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 2, 2026
நேதாஜி பொன்மொழிகள்!

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்
News January 2, 2026
இந்தியாவில் புல்லட் ரயில்.. வந்தது அறிவிப்பு

நாட்டின் முதல் புல்லட் ரயில், 2027-ம் ஆண்டு ஆக.15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் முதல் பிலிமோரா வரையில் ரயில் சேவை தொடங்கும் என கூறியுள்ளார். 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.
News January 2, 2026
டெம்போ ஓட்டுநர் டூ ஏர்லைன்ஸ் ஓனர்!

கடினமாக உழைத்தால் டெம்போ ஓட்டுநர் கூட ஏர்லைன்ஸ் ஓனர் என்பதே ஷ்ரவன் குமாரின் வாழ்க்கை கதை. UP-ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தியுள்ளார். 2014-ல் கனிமம், போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வெற்றிகண்டுள்ளார். இந்நிலையில் Shankh ஏர்லைன்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் சாமானியர்களுக்கு விமானப்பயணத்தை எளிதாக்குவதே தனது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.


