News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News February 9, 2026

விஜய் இப்போது பயப்படுகிறார்: கடம்பூர் ராஜு

image

‘மெர்சல்’ பட பிரச்னைக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அப்போது, தனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனாக இருப்பேன் என விஜய் கூறியதாகவும், ஆனால் தற்போது அதிமுக பெயரையே சொல்ல விஜய் பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக GST, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை எதிர்க்கும் வகையிலான வசனங்கள் இருந்தன.

News February 9, 2026

எந்த கடவுளிடம் என்ன வரம் கேட்க வேண்டும் தெரியுமா?

image

எந்த தெய்வத்திடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் *மனநிம்மதிக்கு சிவன் *வீரத்துக்கு முருகன் *பணவரவுக்கு குபேரன் *வீட்டில் ஐஸ்வர்யம் பெருக மகாலட்சுமி *தீமைகளில் இருந்து விடுபட முனீஸ்வரன் *திருமண வரத்துக்கு விஷ்ணு *ஆரோக்கியம் பெற அனுமன் *நினைத்தது நடக்க ஐயப்பன் *மனதில் விரும்புபவர்களை மணமுடிக்க ஸ்ரீராமர் *தடைகள் விலக விநாயகர் *மங்களகரமான வாழ்க்கைக்கு அம்பிகை. SHARE IT.

News February 9, 2026

BREAKING: நள்ளிரவில் தவெக முக்கிய நிர்வாகிகள் கைது

image

தேனியில் கடந்த 7-ம் தேதி நாதக-தவெகவினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் தவெக மாவட்ட நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!