News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News February 12, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது!

தங்கம் விலை இன்று(பிப்.12) சவரனுக்கு ₹1,520 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹190 குறைந்து ₹14,600-க்கும், சவரன் ₹1,16,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் காலையில் சற்று உயர்ந்த தங்கம் தற்போது சரிவை நோக்கிச் செல்வதால் இந்திய சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 12, 2026
ஆதாருக்கு முன் இதான் இந்தியர்களின் அடையாளம்!

உங்க தாத்தா, பாட்டி கையில் பாருங்க, இந்த தழும்பு இருக்கும். ஆதார் கார்டுக்கு முன், இந்தியர் என்பதற்கு அடையாளம் என்று சொல்லும் அளவிற்கு அனைத்து இந்தியர்களின் கையிலும் இத்தழும்பு இருந்தது. பெரியம்மையை தடுக்க போடப்பட்ட தடுப்பூசியால் உண்டாகும் தழும்பு இது. 1980-களின் பிற்பகுதி வரை போடப்பட்ட இந்த தடுப்பூசி, சொட்டு மருந்து வருகைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. உங்க வீட்டில் யாருக்காவது இந்த தழும்பு இருக்கா?
News February 12, 2026
அமைச்சர்களின் தொகுதிகளை கேட்கும் கம்யூனிஸ்டுகள்?

KN நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதியையும் திமுகவிடம் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த 2 தொகுதியிலும், கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கெனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்கமாட்டோம் என திமுக நிர்ப்பந்திப்பதாக கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.


