News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 19, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500.. புதிய அறிவிப்பு

தமிழ்நாட்டை போலவே, புதுச்சேரியிலும் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை அம்மாநில CM <<18889446>>ரங்கசாமி <<>>வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், * வரும் 7-ம் தேதி முதல் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ₹2,500-ஆக உயர்த்தப்படுவதாகவும், முதியோருக்கு கூடுதலாக ₹500 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ள அவர், 15 நாள்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News January 19, 2026
கன்னித்தன்மையை இழக்க விரும்பாத ஜப்பானியர்கள்

கடந்த 10 ஆண்டுகளாக ஜப்பான் இளைஞர்களுக்கு பாலுறவு ஈடுபாடு, பாலுறவு சார்ந்த நெருக்கம் மீதான ஆர்வம் கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 25 வயதைத் தொட்ட இளைஞர்களில் 50%-க்கும் மேலானோர் பாலுறவில் ஈடுபடாத Virgin-களாக உள்ளார்களாம். இதற்கு சமூக அழுத்தம், வாழ்க்கைமுறை மாற்றம், பணிச்சூழல், சுயசார்பு சிந்தனை போன்றவை காரணங்களாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News January 19, 2026
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்!

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என அம்மாநில EC அறிவித்துள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது தவறில்லை என்றும், EVM-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது எனவும் தேர்தல் அதிகாரி சங்க்ரேஷி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு EVM பயன்படுத்தலாம் என பாஜக கோரிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மே 25-க்கு பிறகு தேர்தல் நடைபெறவுள்ளது.


