News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News September 15, 2025
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக கோபப்பட்ட மோகன்லால்

மலையாள பிக்பாஸில் தன்பாலின ஜோடி பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இவர்களை போன்றோரை தங்கள் வீட்டிற்குள்ளே விடமாட்டோம் என்று சக பெண் போட்டியாளர்கள் கூறினர். ஆனால், அவர்களுக்கான அங்கீகாரத்தை கோர்ட்டே கொடுத்துள்ளபோது, இப்படி கூற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? என தொகுப்பாளரான மோகன்லால் கோபமாக கேட்டார். இவர்களை தன் வீட்டுக்குள் அனுமதிப்பேன் என்றும் கூறிய அவரது கருத்துக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
News September 15, 2025
விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி: ஐ.பெரியசாமி

விஜய்யை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். விஜய் சினிமா நடிகர் என்பதால், பொழுதுபோக்கிற்காக அவரை பார்க்க மக்கள் கூட்டமாக செல்வதாகவும் கூறியுள்ளார். 2026 தேர்தலில் 2-வது இடத்தை பிடிக்க EPS முயற்சிப்பதாகவும், 3-வது இடத்துக்கு சீமானும், விஜய்யும் போட்டி போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
News September 15, 2025
IND Vs PAK போட்டியில் ₹1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்: சிவசேனா

IND Vs PAK போட்டியில் ₹1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக சஞ்சய் ராவத்(UBT) குற்றம்சாட்டியுள்ளார். இதில் ₹25,000 கோடி பாகிஸ்தானுக்கு சென்றதாகவும், முக்கியமாக ₹1000 கோடி அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பணம் நம் நாட்டுக்கு எதிராக செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர், இது மத்திய அரசுக்கும், BCCI-க்கும் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.