News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 31, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹85,000 குறைந்தது

<<19009659>>தங்கம் <<>>விலையை போல், வெள்ளி விலையும் பெரியளவில் குறைந்து வருகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ₹55, கிலோவுக்கு ₹55,000 குறைந்தது. இதனால், மாலையில் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை எதிரொலியால் தற்போது கிராமுக்கு மேலும் ₹30 குறைந்துள்ளது. இன்று மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹85,000 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News January 31, 2026
மாற்றி மாற்றி பேசி மாட்டிய விஜய்

Ex.CM கருணாநிதி, MGR, ஜெயலலிதாவை தனது ரோல் மாடலாக கருதுவதாக விஜய் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஊழலுக்கு எதிரான அரசியலை செய்வதாக கூறும் விஜய், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமப்பவர்களையே ரோல் மாடல் என கூறியிருப்பதால் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இதன்மூலம், அரசியல் புரிதல் இல்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
News January 31, 2026
விமானங்கள் பறக்க தடை.. அரசின் திடீர் உத்தரவு ஏன்?

பிப்.5,6-ல் வங்கக்கடலுக்கு மேல் சுமார் 3,190 km-க்கு விமானம் இயக்குவதற்கு NOTAM மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் ஏற்படக்கூடிய அபாயம் பற்றி அறிவிக்க வெளியிடப்படும் அறிக்கைதான் NOTAM(Notice to Airmen). தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்தியா ஏவுகணையை சோதிக்க திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. Op.சிந்தூருக்கு பிறகு இந்தியா இப்படியான பல சோதனைகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


