News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News December 15, 2025

உதட்டளவில் சமூகநீதி பேசும் திமுக அரசு: அண்ணாமலை

image

100-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மாணவர் விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க மாணவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மாணவர்கள் முன்னேற்றத்தில் CM காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 15, 2025

BREAKING: பள்ளிகள் 9 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளிகளுக்கு டிச.24 முதல் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன.4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. தற்போது, புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது. புதுச்சேரியிலும் ஜன.1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2025

BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

image

வரலாறு படைக்கும் அளவிற்கு ஈரோட்டில் விஜய்யின் பரப்புரை கூட்டம் நடைபெறும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் கூட்டம் நடத்தப்படும் எனவும், குடிநீர், ஆம்புலன்ஸ் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!