News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News January 7, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (94), உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வாஜ்பாய் அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், அசாமில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். இந்நிலையில், கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவை எப்போதும் நினைவுகூரப்படும் என PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

குழந்தைகள் போன் பார்ப்பதை குறைக்க ஈஸி டிப்ஸ்!

image

➤ஒரு நாளில் எவ்வளவு நேரம் போன் பார்க்கலாம் என டைம் லிமிட் செட் பண்ணுங்க ➤படித்துமுடித்த பின், வீட்டு வேலைகளில் உதவினால் போன் கொடுங்கள் ➤Sports, இசை, நடனம் ஆகியவற்றில் அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள் ➤எந்தெந்த நேரத்தில் போன் பயன்படுத்த கூடாது என ரூல்ஸ் போடுங்கள் ➤தங்கள் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்ள பழக்கப்படுத்துங்கள் ➤நீங்களும் போன் பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். இதை SHARE பண்ணலாமே.

News January 7, 2026

ஈரான் தான் அடுத்த குறி.. டிரம்ப் மெகா பிளான்!

image

வெனிசுலாவை அடுத்து ஈரானை தான் டிரம்ப் குறிவைத்துள்ளதாக US பொருளாதார பேராசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார். புத்தாண்டில் டிரம்ப்- இஸ்ரேல் PM நெதன்யாகு சந்தித்த போதே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், US வெளியுறவுக் கொள்கையை அதிபர்கள் அல்ல, ‘Deep State’ எனும் நிழல் அரசு தான் தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!