News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News January 27, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 27, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *நீங்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால், வானவில்லைக் காண முடியாது. *உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம். *வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப் படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன. *கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்கு பிறகு.
News January 27, 2026
பனிப்புயலில் சிக்கிய விமானம்… 7 பேர் பலி!

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மெய்னே மாகாணத்தில் கடும் பனிப்புயலுக்கு இடையே பறந்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது. ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


