News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News December 18, 2025

பொங்கல் பரிசுத்தொகை ₹4,000.. தமிழக அரசு முடிவு

image

2026 தேர்தலை கருத்தில்கொண்டு, பொங்கல் பரிசு ரொக்கத்தொகையை இதுவரை இல்லாத அளவில் வழங்க திமுக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பொங்கல் பரிசுத்தொகையாக ₹3,000 வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை & ஒரு முழுக்கரும்பும் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், ₹1,000 மகளிர் உரிமைத்தொகையும் வரவு வைக்கப்படும் என்பதால், மொத்தமாக ₹4,000 கிடைக்கலாம்.

News December 18, 2025

90s கிட்ஸ்களே இதை மீண்டும் படிக்கலாமா?

image

அண்ணே அடுத்த வருஷம் இது எனக்கு வேணும், அக்கா அவளுக்கு அத கொடுத்துராதீங்க என ஒரு வருடத்திற்கு முன்பே புக் செய்வோம். அது ரயில், பஸ்ஸுக்கான டிக்கெட் அல்ல. ‘கோனார் தமிழ் உரை’ நோட்ஸ். சற்று கிழிசலாக இருந்தாலும் நூல் வைத்து தைத்து, நியூஸ் பேப்பரை அட்டையாக மாற்றி அலங்கரித்து வைத்திருப்போம். அதிலும் புதிதாக வாங்கினால், அதில் வரும் வாசமே இனம்புரியாத மகிழ்ச்சியை தரும். நீங்க ஃபீல் பண்ணிருக்கீங்களா?

News December 18, 2025

தவெக ஒரு கொலைகார சக்தி: TKS இளங்கோவன்

image

திமுக ஒரு தீய சக்தி என <<18602926>>விஜய்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், கரூரில் 41 பேரை கொன்ற தவெக ஒரு கொலைகார சக்தி என்று TKS இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். கரூரில் தாமதமாக வந்ததற்கான காரணத்தை இதுவரை விஜய் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சாடினார். அதேநேரம், மக்களுக்காகவே பணியாற்றுகிற ஒரு தூய சக்தியாக திமுக விளங்குவதாகவும் TKS கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!