News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News January 31, 2026

தேசிய ஊடகத்திற்கு விஜய்யின் முதல் பேட்டி!

image

சென்னையில் NDTV TN கருத்தரங்கில் CM, EPS உள்ளிட்டோர் பங்கேற்ற நடைபெற்ற நிலையில், அச்செய்தி நிறுவன ஊடகவியலாளர்களை பனையூருக்கு அழைத்து விஜய் பேட்டி அளித்துள்ளார். தேசிய ஊடகத்திற்கான தனது முதல் பேட்டி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய், ஜன நாயகன் சென்சார், கரூர் சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது எதிர்காலம் இனி அரசியல் தான் என்றும் அவர் உறுதி செய்துள்ளாராம்.

News January 31, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 597 ▶குறள்: சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. ▶பொருள்: உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.

News January 31, 2026

துணை முதல்வராக பதவி ஏற்கிறார் அஜித் பவார் மனைவி!

image

அஜித் பவார் மரணத்தையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் தலைவராக அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் சகான் புஜ்பால் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மாலை 5 மணியளவில் அவர் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

error: Content is protected !!