News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News December 28, 2025
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?

உள்ளூரில் NZ, SA அணிகளுக்கு எதிராக டெஸ்டில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க BCCI ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக Ex வீரர் லட்சுமணனை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லட்சுமண் BCCI அகாடமியின் உயரிய பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த புடின்

ரஷ்யாவுடனான பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தால், தங்களது இலக்குகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் அடைவோம் என அவர் எச்சரித்துள்ளார். ஆனால், அமைதியை எட்டும் தங்களது முயற்சிகளுக்கு தாக்குதல் மூலமாக ரஷ்யா பதிலளிப்பதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார். இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அதிபர் டிரம்ப்பை ஜெலன்ஸி இன்று சந்திக்கிறார்.
News December 28, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்!

*சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை *தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும் *சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரேச் சாக்கடை ஆகிவிடும் *அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.


