News August 16, 2024

முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

image

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.

Similar News

News November 21, 2025

NATIONAL 360°: வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலி

image

*உ.பி., பள்ளி ஒன்றில் கேஸ் லீக்கின் காரணமாக 16 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். *டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். *திரிபுராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலியாகினர். *மும்பையில் காற்றுமாசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

குளிர்காலத்தில் வாக்கிங் போவதில் இப்படி ஒரு சிக்கலா?

image

குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அதில் காற்று மாசுகள் படிந்துகொள்ளும். காலை வாக்கிங் செல்லும் அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிப்பை, N95 மாஸ்க் அணிவது, அதிக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது உள்ளிட்டவைகள் மூலம் தவிர்க்க முடியும் எனவும் கூறிகின்றனர். SHARE IT

News November 21, 2025

ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

image

ஹர்திக் பாண்ட்யாவும், அவரது காதலி மஹிகா சர்மாவுக்கு நெருக்கமாக இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலராலும் கவனிக்கப்பட்ட விஷயம், மஹிகா கையில் உள்ள வைர மோதரமே. இதை வைத்து பலரும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஹர்திக்கிற்கு கடந்த ஆண்டு அவரது மனைவியுடன் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!