News August 16, 2024
முல்லை பெரியாறு: அவதூறு பரப்பினால் நடவடிக்கை

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் ரோஷி அகஸ்டின் எச்சரித்துள்ளார். அணையால் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து என பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, முல்லை பெரியாறு அணை ஒரு தண்ணீர் வெடிகுண்டு என அம்மாநில காங்கிரஸ் தலைவர் பேசியிருந்தனர்.
Similar News
News November 23, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 23, 2025
தலைக்கு குளிச்சதும் டவல் கட்டுறீங்களா? NOTE THIS!

தலைக்கு குளித்த பின் டவலால் முடியை கட்டுவது பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். ஆனால் டவலை இறுக்கமாக கட்டினால் முடி உடைவது, உதிர்வது போன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, ஈரத்தலையை டவலை வைத்து மென்மையாக துடையுங்கள். வேண்டுமென்றால் Cool Mode-ல் டிரையரை யூஸ் பண்ணலாம். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
20 கோடி திருப்பதி லட்டுகளில் கலப்படம்!

<<18250479>>திருப்பதி<<>> ஏழுமலையான் கோயிலில் சுமார் 20 கோடி லட்டுகள், கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான SIT விசாரணையில், ₹250 கோடி மதிப்பிலான சுமார் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


