News August 28, 2025
முகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிகளவில் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்கள், 12 தட்கல் டோக்கன்களோடு 4 கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும்.
Similar News
News August 28, 2025
மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.
News August 28, 2025
₹45,000 சம்பளத்துடன் ரயில்வேயில் வேலை

ரயில்வேயில் காலியாகவுள்ள 368 Section Controller பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 33. தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ தேர்வு. சம்பளம்: ₹45,000. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.15-ல் தொடங்கி, அக்.14 உடன் நிறைவடைகிறது. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News August 28, 2025
BREAKING: மூத்த அரசியல் தலைவர் கவலைக்கிடம்

தூய அரசியலுக்கு சொந்தக்காரரான நல்லக்கண்ணுவின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடல்நிலை நேற்று இரவு பின்னடைவை சந்தித்ததால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.