News March 25, 2024
மீண்டும் ஆடுகளம் திரும்பும் முகமது அமீர்?

ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளதாக பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காலம் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். தற்போதைய சூழ்நிலையில் மேலும் சில காலம் பாக். அணிக்காக விளையாட விரும்புகிறேன். வரும் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்தால் களமிறங்குவேன்”என்றார். இவர் 2020இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Similar News
News July 11, 2025
ஜேசிபியை பார்க்கக்கூட 10,000 பேர் செல்வார்கள்: பஞ்சாப் CM

10,000 மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்குச் சென்றுவிட்டு, அங்கு உயர்ந்த விருதுகளை மோடி பெறுவதை பெருமையாகக் கூறுவதாக பஞ்சாப் CM பகவந்த் மான் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அதோடு, JCB-ஐ பார்க்கக்கூட 10,000 பேர் கூடுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். இந்நிலையில், பெயர் குறிப்பிடாமல், மாநில உயர் பொறுப்பாளரின் இந்த கருத்துகள் பொறுப்பற்றவை & வருந்தத்தக்கவை என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
News July 11, 2025
கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
News July 11, 2025
குன்றக்குடி அடிகளாருக்கு CM ஸ்டாலின் புகழாரம்

திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்று குன்றக்குடி அடிகளாரை CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி SM-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்றும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்றும் புகழ்ந்துள்ளார்.