News September 27, 2024
MSME நிறுவனங்களுக்கு ரூ.4,004.77 கோடி கடனுதவிகள்

சேலம் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 10,210.69 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு முதல் காலண்டில் ரூபாய் 3,689.49 கோடி மற்றும் இரண்டாவது காலண்டில் ரூபாய் 315.28 கோடி என மொத்தம் இதுவரை 20,167 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 4,004.77 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்!

சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி வரை, காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துகொண்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
உர உற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து!

சேலம் மாவட்டத்தில் உர விற்பனையில் முறைகேடு கண்டறியபட்டால் விற்பனை உரிமம் ரத்துச் செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் எச்சரித்துள்ளார். நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதுடன் யூரியா உரங்களை சரியான அளவில் கொள்முதல் செய்து முறையாக விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். யூரியா பதுக்கல் மற்றும் கடத்தல் போன்ற நிகழ்விற்கு துணை போகக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.24) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.