News August 17, 2024
MSME தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன்

மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 19ஆம் தேதி முதல் செப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9445023488, 7845529657, 9600130247, 9445023494. எண்களில் தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
செங்கல்பட்டு: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <
News November 14, 2025
செங்கல்பட்டு: லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், பிரவின்குமார் என்பவரின் 2,400 சதுர அடி நிலத்தை பத்திர பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்க முயற்சித்த சார் பதிவாளர் ரேவதி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று (நவ.13) கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 14, 2025
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் ரேடியல் சாலையில், உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் மாலை விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை குடியிருப்பு வாசிகள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் சர்புதீன் என்ற அந்த நபர் இதே போல் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது


