News August 5, 2024
மகாவீரரின் பொன்மொழிகள்

✍நீயும் வாழு; பிறரையும் வாழ விடு. இதுதான் அஹிம்சை தத்துவம்தான். ✍உண்மையாக இருப்பவனுக்கு உபதேசங்கள் தேவையில்லை. ✍பகிர்ந்த துன்பம் பாதியாகிறது; பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது. ✍ஒவ்வொரு சொல்லுக்கும் ஆற்றல் உள்ளது; எனவே எதைப் பேசினாலும் சிந்தித்துப் பேசுங்கள். ✍உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. ✍பாவச் செயல்களின் முடிவில் துன்பம் வந்தே தீரும். ✍உண்மைக்கு வரம்பு உண்டு; பொய்க்கு வரம்பு இல்லை.
Similar News
News March 18, 2026
900 பேர் பலி.. அடுத்த சோகம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 67 பெண்கள் மற்றும் 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், 2,221 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
News March 18, 2026
எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News March 18, 2026
கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.


