News April 16, 2024

புத்தரின் பொன்மொழிகள்

image

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.

Similar News

News April 29, 2025

9 செவ்வாய்கிழமைகளில் முருகனை வழிபட்டால்….

image

9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடுவது, வாழ்வில் செல்வத்தை பெருக்கி, செவ்வாய் தோஷம் பாதிப்புகளை குறைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலையில் நீராடி, முருக பெருமானை வழிபடுங்கள். மாலை வரை பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதமிருந்து முருகனின் பெயரை உச்சரியுங்கள். மாலையில், பிரசாதம் செய்து, நெய்வேத்தியம் படைத்து முருகனை வழிபட்டு விரதத்தை முடியுங்கள்.

News April 29, 2025

பப்ளிசிட்டி இல்லாமல் உதவும் அஜித்.. ஜனாதிபதி புகழாரம்

image

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில், தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜித், பல்துறை நடிகர்களில் ஒருவராக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமாவைத் தாண்டி பப்ளிசிட்டி இல்லாமல் பல தொண்டு செயல்களை அஜித் செய்து வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

News April 29, 2025

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசு புதிய ஆணை

image

சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தரக்கூடாது என்ற உத்தரவை TN மின்சாரத் துறை திரும்பப் பெற்றுள்ளது. ஏப்.8-ல் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், சூரிய சக்தி பம்ப் செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து, அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!