News November 24, 2024
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

*கூட்டத்தில் நிற்பது எளிதானது. தனியாக நிற்பதற்குதான் தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் வலிமையானவர்களின் பண்பு. *நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களைக் கொன்றுள்ளது. *நீங்கள் உலகை மாற்ற விரும்பினால், உங்களிடமிருந்து தொடங்குங்கள். *எப்போதும் உண்மையானவராகவும், கனிவானவராகவும், அச்சமற்றவராகவும் இருங்கள்.
Similar News
News November 9, 2025
திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது: EPS

TN-ல் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை என EPS குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 54 மாத DMK ஆட்சியில் போலீஸ் தனது கம்பீரத்தை இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்றுவரை TN மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருவதாகவும், தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.
News November 9, 2025
சிசேரியன் காயம் வேகமாக ஆற TIPS!

கர்ப்ப காலத்தில் எப்படி உடல்நலத்தை பேணி காத்தீர்களோ அதைவிட கவனமாக குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ள வேண்டும் ➤ஆரஞ்சு, நெல்லி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் ➤பருப்பு, மீன், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் ➤சருமம் பழையபடி மாற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம் ➤தினம் ஒரு கீரை, நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சிறப்பு. தாய்மார்களுக்கு SHARE THIS.
News November 9, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் சூழலுக்கேற்ப கடைகளை சீக்கிரம் மூட சில மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


