News November 25, 2024
ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

*வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். *வெல்ல முடியாத படைகளே இல்லை என்பதை வரலாறு காட்டுகிறது. *முட்டாளாக இருக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சிலர் அந்தச் சலுகையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். *நான் யாரையும் நம்புவதில்லை, என்னையே கூட நம்புவதில்லை. *எழுத்தாளர்கள் மனித ஆன்மாக்களின் பொறியாளர்கள்.
Similar News
News October 17, 2025
தீபாவளி தித்திக்கிறதா? திக்கு முக்காட வைக்கிறதா?

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருப்பதாக வைத்து கொள்வோம். புத்தாடை – ₹4,000 (தலைக்கு ₹1,000), வெடி – ₹2,500, இறைச்சி – ₹1,500, இதர செலவுகள் – ₹2,000 என மொத்தம் ₹10,000 ஆகிறது. வெளியூரில் இருந்து சொந்த ஊர் சென்றால் கூடுதலாக ₹5,000 ஆகும். வருடத்தில் ஒரு நாள் தானே தீபாவளி என்கிறது ஒரு மனம், ஒரு நாளுக்காக இவ்வளவு செலவா என்கிறது ஒரு மனம் என பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன? தீபாவளி பட்ஜெட் எவ்வளவு?
News October 17, 2025
தலித்துகள் மீதான கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல்

உ.பி.,யில் திருடியதாக ஹரிஓம் என்ற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஆனால், தன்னை சந்திக்கக் கூடாது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள், பாலியல் வன்முறைகள், கொலைகள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
News October 17, 2025
சட்டப்பேரவையில் சூடுபிடித்த இருமல் மருந்து விவகாரம்

இருமல் சிரப் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் EPS கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ம.பி.,யில் இருந்து மெயில் வந்த அரை மணி நேரத்தில் தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இனி வரும் காலங்களில் மருந்து உற்பத்தியாளர்களை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.