News September 28, 2025

உயிரிழந்த மகனுக்கு தாய் கடைசி முத்தம்.. கண்ணீர் PHOTO

image

கரூர் துயரத்தில் இறந்த தனது மகனை கட்டிப்பிடித்து கடைசியாக தாய் முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்த்தியது. பிள்ளையை பறிகொடுத்துவிட்டு, நெஞ்சில் அடித்துக் கொண்டு தவிக்கும் அந்த ஏழை தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்வது, யார் ஆறுதல் சொல்வது. கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளைக்கு, ஒரு தாய் கொள்ளிவைப்பது போன்ற பெரும் துயரம் யாருக்கும் வரக்கூடாது. இதுபோன்ற சம்பவம் இனி நிகழவும் கூடாது.

Similar News

News September 28, 2025

கரூர் துயரத்தில் மரணித்த இளம்ஜோடி

image

கரூர் துயரத்தில் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடி பூக்காமல் செடியிலேயே மரணத்திருக்கிறது. கோகுலஸ்ரீ – ஆகாஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடத்த நிலையில், வருங்கால மனைவியுடன் விஜய்யை பார்த்துட்டு வரேன்னு சொல்லிவிட்டு ஆகாஷ் கரூர் சென்று இருக்கிறார். பொண்ணு மாப்பிள்ளையாக ஜோடியாக சென்றவர்கள் திரும்பி வரவில்லை.

News September 28, 2025

மூலிகை: கொடுக்காய்ப்புளியின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, *கொடுக்காய்ப்புளியை தினமும் சாப்பிட்டு வந்தால், வாத நோய் ஏற்படாது *ஜீரண சக்தியை அதிகரிக்கும் *கொடுக்காய்ப்புளியின் பூ, பல்வலி, ஈறு பிரச்னைக்கு தீர்வளிக்கும் *தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது *வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்க உதவும் *கொடுக்காய்ப்புளியின் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். SHARE.

News September 28, 2025

காவல்துறையினர் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை: EPS

image

தவெக பரப்புரையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு, காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிக்காததே காரணம் என EPS குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் கட்சிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே முறையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். விஜய் நடத்திய மற்ற கூட்டங்களை பார்த்து அதற்கு ஏற்றார் போல, போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், துயரத்தை தடுத்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!