News November 24, 2024
5 வயது மகளை கொன்ற தாய்.. அதிர்ச்சி பின்னணி

டெல்லி அசோக் விஹாரில் இச்சம்பவம் நடந்துள்ளது. HP’யை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் இன்ஸ்டாவில் டெல்லியைச் சேர்ந்த வேறொருவரை காதலித்தார். திருமண ஆசையில் டெல்லி வந்தவரை காதலனின் குடும்பம் ஏற்க மறுத்துள்ளது. காரணம், அப்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள் (5) உள்ளார். திருமணத் தடையால், விரக்தியில் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தாய் மீது தற்போது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
News December 9, 2025
RO-KO நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை: அஸ்வின்

2027 ODI உலகக்கோப்பை வரை ரோஹித், கோலி நீடிப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுவதை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். 2 மூத்த வீரர்களும் இன்னும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர்கள் நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை. அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த கிரிக்கெட் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
புத்தர் பொன்மொழிகள்

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.


