News April 29, 2025

மகள் முன் தாய் பாலியல் வன்கொடுமை..இளைஞர் கைது

image

டெல்லியில் மகள் முன்பு, அவரின் தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஸ்வரூப் நகரில் உள்ள பண்ணை வீட்டில் பெண்ணும், மகளும் இரவில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் தர்மேந்தர், அந்தப் பெண், மகளை கயிற்றால் கட்டிப் போட்டார். பின்னர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின்பேரில் தர்மேந்தரை போலீஸ் கைது செய்துள்ளது.

Similar News

News April 29, 2025

இன்னும் நிறைய இருக்கு சாம்பியன்: யூசுஃப் பதான்

image

IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற தன்னுடைய சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியை, யூசுஃப் பதான் பாராட்டியுள்ளார். இளம் வீரர்களுக்கும் RR-க்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளதாகவும், சாம்பியன் சூர்யவன்ஷி இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகவும் அவர் புகழ்ந்துள்ளார். 2010-ல் RR-க்காக விளையாடிய யூசுஃப் 37 பந்துகளில் சதமடித்த நிலையில், வைபவ் தற்போது 35 பந்துகளில் சதமடித்துள்ளார்.

News April 29, 2025

லியோ டால்ஸ்டாய் பொன்மொழிகள்

image

*பொறுமையும் நேரமுமே மிகவும் சக்தி வாய்ந்த வீரர்களுக்கு இணையானது. *வாழ்க்கையில் முழு திருப்தியை எதிர்பார்க்கின்றீர்களா? உங்களால் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்க முடியாது. *வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களே, வாழ்க்கையை உண்மையாக வாழ வைக்கின்றன. *எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ, அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. *நமக்கு எதுவும் தெரியாது என்பதை உணர்வதே உண்மையான ஞானம்.

News April 29, 2025

கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

image

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.

error: Content is protected !!