News April 5, 2025

பஸ்ஸில் மகன்கள் கண்முன்னே தாய் பலாத்காரம்!

image

கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர். உள்ளூர் போலீசார் வழக்கை மூடி மறைக்க முயன்ற நிலையில், விஜயநகர் எஸ்.பி. தலையிட்டதால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் எத்தனை நிர்பயாக்களுக்கு இந்த கொடூரம் நடக்கும்? என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்

image

இரட்டை வரி விதிப்பு விவகாரம் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பஸ் உரிமையாளர்களுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில், பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு இன்று மாலையில் இருந்து பஸ் சேவை இயக்கப்படும் என ஆம்னி பஸ் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

தவெக எலி, அதிமுக புலி: ஜெயக்குமார் பாய்ச்சல்

image

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பதை ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாகவே இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை எலி என்றும், அதிமுகவை புலி எனவும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்தவர் என்றும், அவர் எங்கிருந்தாலும் வாழ்க எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

News November 28, 2025

டிரம்ப்பின் அடுத்த அதிரடி

image

USA அதிபரின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து <<18409306>>19 நாடுகளின்<<>> கிரீன் கார்டுகளை பரிசீலனை செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய 3-ம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை நிரந்தரமாக நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். பைடனின் குடியேற்ற கொள்கைகளில் இருந்து முழுமையாக மீண்டுவர இந்த முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!