News April 10, 2025
மருமகனுடன் மாமியார் காதல்.. கண்ணீருடன் கணவர்

உ.பி.யில் சொந்த மகளுக்கு நிச்சயம் செய்த வருங்கால மருமகனுடன் (வயது 20), மாமியார் (வயது 40) <<16041082>>ஓட்டம் <<>>பிடித்தார். இந்த செய்தி தான் நேற்று முழுவதும் ட்ரெண்டிங். இந்நிலையில், அப்பெண்ணின் (மாமியார்) கணவர், மகள் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த நகை மற்றும் ₹10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்து தறுமாறும் கண்ணீருடன் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.
Similar News
News December 5, 2025
இன்று உலக மண் தினம்.. ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

உணவின் தொடக்கம் இந்த மண். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நம்பி இருப்பது இந்த மண்ணைதான். ஆனால், நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா? இல்லை! அதை சிந்திப்பதற்கான நாள்தான் இன்று. குறைந்து வரும் மண்வளம், மாசுபாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
News December 5, 2025
தமிழ் சினிமாவின் சிகரம் மறைந்தது.. குவியும் இரங்கல்

அரை நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய அங்கமாக விளக்கி வந்த <<18470141>>AVM சரவணன்(86)<<>> நேற்று மறைந்தார். நேற்று நேரில் செல்ல முடியாத திரை பிரபலங்கள் பலரும் இன்று அவரது குடும்பத்தினருக்கு சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், எரிமேடையில் AVM சரவணன் உடலை பார்த்தபோது, எனக்கான காசோலையில் கையொப்பமிட்ட கையை பார்த்து கண்ணீர் முட்டியது என கவிஞர் வைரமுத்து வேதனையுடன் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News December 5, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

<<18463810>>திருப்பரங்குன்றத்தில்<<>> தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் ராஜ்யசபா குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.


