News April 19, 2025
மகளின் மாமனாருடன் ஓட்டம் பிடித்த தாய்!

என்னதான் நடக்குது? அப்படினு கேட்குற அளவுக்கு உ.பி.யில் விநோதமான காதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்மையில், பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன், <<16041082>>மாமியார்<<>> ஓடிச் சென்றது பெரும் பரபரப்பானது. அடுத்த ட்விஸ்டாக படாவுனைச் சேர்ந்த மம்தா என்ற பெண், தனது மகளின் மாமனார் சைலேந்திராவுடன், ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் லாரி டிரைவரான அவரது கணவர் மனம் நொந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
Similar News
News October 25, 2025
கூகிள் Chrome யூஸ் பண்றீங்களா.. அய்யய்யோ! உஷாரா இருங்க

Chrome பிரவுசரில் முக்கிய செக்யூரிட்டி குறைபாடு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதனால் கணினியை எளிதில் ஹேக் செய்து தகவல்களை திருடி விடலாம் என்றும் CERT-In எச்சரித்துள்ளது. Chrome & macOS-ல் 41.0.7390.122/.123 பயன்படுத்துவோரும், Linux-ல் 141.0.7390.122 வெர்ஷனை பயன்படுத்துவோரும் உடனடியாக அவற்றை அப்டேட் செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News October 25, 2025
உருவானது புயல் சின்னம்.. தமிழகம் முழுவதும் அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுதினம் புயலாக மாறும் என IMD கணித்துள்ளது. இதனால், தமிழகம், புதுவையில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
செல்வராகவனுக்கு அப்படி என்ன பிரச்னையா இருக்கும்?

இன்னும் 6 மாதங்களில் வாழ்வின் கடினமான தருணத்தை சந்திக்கவுள்ளேன் என்று செல்வராகவன் கூறியுள்ளார். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத வலி என்னவென்று நேர்காணல் ஒன்றில் கேட்டதற்கு, ஏற்கெனவே தனக்கு கல்லறை கட்டி பூச்செண்டு வைத்துவிட்டதாகவும், அதை உடைத்து தற்போது வாழ்கிறேன் என்றும் அவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. 2011-க்கு பிறகு அவரது படங்கள் வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னவா இருக்கும்?


