News April 12, 2024

தாய், 3 குழந்தைகள் சடலமாக மீட்பு

image

ஜெயங்கொண்டம் அருகே வளவனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜா வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். அவருடைய மனைவி பானுமதி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக வீடு பூட்டிக் கிடந்தது கண்டு சந்தேகமடைந்த அடுத்த வீட்டினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர். கொலையா தற்கொலையா என்று விசாரணை நடக்கிறது.

Similar News

News April 29, 2025

சூர்யா ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்

image

‘ரெட்ரோ’, = RJ பாலாஜி படம் என அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வர உள்ளன. ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதோ வாடிவாசலுக்குதான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். நீங்களும் ‘வாடிவாசல்’ படத்துக்கு வெயிட் பண்றீங்களா?

News April 29, 2025

மைனாரிட்டி அரசு… மீண்டும் பிரதமரான மார்க் கார்னி

image

கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் மார்க் கார்னி பிரதமரானார். மொத்தமுள்ள 343 தொகுதிகளில் 168 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்கள் லிபரல் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர்கள் ஆட்சி அமைக்கின்றனர்.

News April 29, 2025

மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்

image

2010 காமன்வெல்த் போட்டி முறைகேடு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்ற ED-ன் அறிக்கையை டெல்லி கோர்ட் ஏற்றுக்கொண்டது. 13 ஆண்டுகள் நடந்த விசாரணையில் காமன்வெல்த் போட்டியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என ED கூறியது. இந்த ஊழலை வைத்து காங்கிரசை விமர்சித்த மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!