News May 16, 2024

ஆண்களை விட வீடுகளில் மரணிக்கும் பெண்களே அதிகம்

image

தமிழ்நாட்டில் 2018 – 2022 வரையிலான காலகட்டத்தில் வீடுகளில் 70% – 76% பேர், மருத்துவமனையில் 21.8% – 27.4% பேர் மரணிப்பதாக பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதியவர்கள் வீடுகளில் உயிரிழப்பது 82% – 86.5%ஆக உள்ளது. ஆண்களை விட பெண்களே வீடுகளில் அதிகளவில் மரணம் அடைகின்றனர். மேலும், அதிகபட்சமாக அரியலூரில் 86.2% பேர் வீடுகளில் மரணம் அடைகின்றனர்.

Similar News

News August 8, 2025

தேங்ஸ் நண்பா… புடினுடன் பேசிய மோடி!

image

நண்பர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக PM மோடி தன் X பதிவில் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் பற்றி தகவல்களை பகிர்ந்ததற்காக, புடினுக்கு நன்றி சொன்ன மோடி, இந்தியா- ரஷ்யாவின் சிறப்புவாய்ந்த உறவையும், நெருக்கத்தையும் மேலும் வளர்க்க உறுதி பூண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் மோதல் வலுக்கும் சூழலில், நம்பகமான கூட்டாளியான ரஷ்யாவுடன் இந்தியா நெருங்குவதையே மோடி-புடின் பேச்சு உணர்த்துகிறது.

News August 8, 2025

எந்த போர்டாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்: அமைச்சர்

image

CBSE உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News August 8, 2025

பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு

image

PM மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் MP கனிமொழி. இது தொடர்பாக தனது X பதிவில், பிரதமரை இன்று நேரில் சந்தித்து தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு மாற்று முனையம் அமைக்க உதவ வேண்டும் என தான் கோரிக்கை வைத்ததாகவும், மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்த அளித்த ஆதரவுக்கும் தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!