News August 4, 2024
9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News November 22, 2025
மதுரை: சிறுமி தற்கொலை முயற்சி… இளைஞருக்கு வலை

அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24. இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார். ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.
News November 22, 2025
127 கிலோ தங்கத்தை கடத்திய தமிழ் பட நடிகை!

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
News November 22, 2025
வெள்ளி விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.


