News August 4, 2024
9 ஆயிரத்தைத் தாண்டிய புத்தொழில் நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் தற்போதுவரை 9,038 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக MSME
தொழில்துறை தெரிவித்துள்ளது. 2021இல் 966ஆக இருந்த மகளிர் புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 4,446 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்களின் (மத்திய அரசு வெளியிட்டது) பட்டியலில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Similar News
News November 26, 2025
தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<
News November 26, 2025
ஸ்டாலினின் பழைய பழக்கம் மாறவே இல்லை: EPS

மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் EPS, செய்தது எல்லாம் துரோகம்தான் என CM குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போது எது நடந்தாலும், தன்னை குறை சொல்லிய பழக்கம் இன்னும் ஸ்டாலினுக்கு மாறவில்லை என EPS பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே தான் என்னென்ன செய்தேன் என சொல்லியிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 26, 2025
தந்தை, காதலன் டிஸ்சார்ஜ்.. ஸ்மிருதி திருமணம் எப்போது?

கடந்த 23-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், மந்தனாவை கரம்பிடிக்க இருந்த பலாஷ் முச்சாலுக்கும், உடல்நல குறைவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திருமண தேதி அறிவிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.


