News July 27, 2024
நிலுவையில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 60.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக உ.பி.,யில் 1.18 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News March 8, 2026
டி20 WC பைனலில் முதல்முறையாக இந்தியர்கள்!

தற்போதைய இந்திய அணியில் உள்ள 6 வீரர்கள் முதல் முறையாக டி20 WC பைனலில் விளையாட இருக்கிறார்கள். அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா. ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர். ODI WC, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பங்கேற்ற போது டி20 பைனலில் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.
News March 8, 2026
இந்திரா காந்தி பொன்மொழிகள்!

*எதிர் கேள்வி கேட்பதே மனித முன்னேற்றத்திற்கான அடிப்படை. *துணிச்சலின் நல்லொழுக்கம், மன்னிப்பு. *ஒருவர் பேசுவதை முழுதாக கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்க பழகிக் கொள்ளுங்கள். *தம் உரிமைகளை கோருபவர்கள் என்றும், தம் கடைமைகளை மறக்கக்கூடாது. *விருப்பம் இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.
News March 8, 2026
கோடிக்கணக்கில் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

ஈரானுடனான போரில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்கா, தற்போது ஆயுத விற்பனையை தொடங்கியுள்ளது. அதன்படி ₹1,290 கோடி மதிப்புடைய ஆயத விற்பனையை செய்ய தனது அவசர அதிகாரத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் தலா 1,000 பவுண்டுகள் எடையுள்ள 12,000 குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது அமெரிக்கா. அத்துடன் முக்கிய தொழில்நுட்ப சேவைகளும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட உள்ளது.


