News March 27, 2024

1400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள்

image

தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிட 1400க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 67 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியிருக்கின்றன. நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் பெறப்பட்டுள்ள வேட்புமனுக்களில் சுமார் 150 பெண்களும் உள்ளனர்.

Similar News

News March 15, 2026

கட்சி சொல்லுமிடத்தில் நிற்பேன்: அண்ணாமலை

image

வரும் தேர்தலில் இந்த தொகுதியில் நில் என்று கட்சி கூறினால், அங்கு நிற்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவரை தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று வாய்திறந்து சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார். கட்சியின் கட்டளைப்படி தெருமுனை பிரசாரத்தை தான் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, சிங்காநல்லூர் தொகுதியில் <<19379037>>அண்ணாமலை<<>> போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

News March 15, 2026

ஒரு மாவட்டமே திமுகவுக்கு கிடையாதா?

image

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புகைச்சல் உண்டாகியுள்ளது. இந்நிலையில், நாகையில் உள்ள 3 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளின் வசமே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனராம். 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரு தொகுதியை காங்., கட்சியும், மேலும், விசிகவும் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 15, 2026

தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

image

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக உருவான கட்சி (TVK) அதிமுக கூட்டணிக்கு சென்றாலும், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!