News August 2, 2024
பேரிடர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: கார்கே

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
அரசின் தனி அதிகார நோக்கமே காரணம்: ராகுல் காந்தி

நாடு முழுவதும் <<18476104>>இண்டிகோ<<>> விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே காரணம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யாமல், நியாயமாக போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமான தாமதங்கள் போன்ற பிரச்னைகளுக்கான விலையை கொடுப்பது சாமானிய மக்களே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 5, 2025
அலர்ட்.. 18 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 1 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கை, சென்னை, காஞ்சி, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உஷாரா இருங்க நண்பர்களே!
News December 5, 2025
இதனால்தான் IPL-ல் ஓய்வு பெற்றேன்.. ரஸல்!

IPL தொடரில் இருந்து விடைபெற்றதற்கான காரணத்தை <<18429842>>ஆண்ட்ரே ரஸல்<<>> தெரிவித்துள்ளார். வெறும் Impact பிளேயராக தொடர தனக்கு விருப்பமில்லை என கூறிய அவர், விளையாடும் போது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை உண்டாக்க விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய தொடரான IPL-ல் விளையாட கடுமையான ஜிம் பயிற்சி தேவைப்படுவதாகவும், அதனை சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.


