News August 2, 2024
பேரிடர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: கார்கே

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 8, 2026
பணமில்லையா? மனமில்லையா? நயினார்

போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு <<18791380>>ஊதியம்<<>> வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு வாக்குறுதியை வீசி எறிந்ததோடு, ஊதியத்தையும் வழங்காமல் ஆசிரியர்களின் வாழ்வை பறிப்பது அராஜகமானது என்று அவர் சாடியுள்ளார். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடத்தும் திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்க பணமில்லையா (அ) மனமில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 8, 2026
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு ₹1,000.. புதிய அறிவிப்பு

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் விலையில்லா துணிக்கு பதிலாக ₹1,000 வழங்கப்படும் என புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, 1,45,930 ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது, பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 8, 2026
MGR-க்கும் சென்சார் போர்டால் பிரச்னை: செல்லூர் ராஜூ

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டால் எந்த நெருக்கடியும் இல்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். எனினும் அன்றைய காங்., ஆட்சியில் MGR-ன் அன்பே வா படத்திற்கு சென்சார் பிரச்னை ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார். அப்படத்தில் ’உதய சூரியன் பார்வையிலே’ என்ற பாடல் வரும். அது சின்னத்தை குறிப்பதாக கூறி சென்சாரின் போது மாற்றச் சொன்னார்கள். பின்னர் U/A சான்றிதழ் பெற்று படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதாக கூறினார்.


