News August 2, 2024

பேரிடர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: கார்கே

image

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 9, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

நீதிபதிகளை திமுக பயமுறுத்த நினைக்கிறது: அண்ணாமலை

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தீர்ப்பு வழங்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிபதியை பதவிநீக்கம் செய்ய திமுக கூட்டணி MP-க்கள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து வாங்கி வருகின்றனர். அரசுக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக நீதிபதியை பதவிநீக்கம் செய்வோம் என்றால், அது மற்ற நீதிபதிகளை பயமுறுத்துவதாகத்தான் அர்த்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 9, 2025

நடிகை வன்கொடுமை வழக்கு: பார்வதி அதிருப்தி

image

<<18502482>>நடிகை பாலியல் வன்கொடுமை<<>> வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை, நடிகை பார்வதி காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். எது நீதி? கவனமாக உருவாக்கப்பட்ட திரைக்கதை தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது; இதை நாம் கவனித்து கொண்டிருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் பார்வதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!