News August 2, 2024
பேரிடர் மேலாண்மைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: கார்கே

இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
தவெக உடன் விசிக, காங்., பேச்சுவார்த்தை: நயினார்

திமுக கூட்டணி பலமாக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூரில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த கூட்டணி எப்படி இருந்தாலும் சரி, வரும் தேர்தலில் NDA கூட்டணி நிச்சயமாக வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
News December 8, 2025
BREAKING: முக்கிய அரசியல் தலைவரை சந்திக்கிறார் விஜய்

நாளை புதுச்சேரிக்கு செல்லும் வழியில், பாமக நிறுவனர் ராமதாஸை விஜய் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுமா அல்லது நட்சத்திர விடுதியில் நடைபெறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இருவரும் சந்தித்தால் அரசியலில் இதுதான் நாளை ஹாட் டாபிக். முன்னதாக ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றபோது, விஜய் சந்திக்கவில்லை என்பதை நாசுக்காக ராமதாஸ் கூறியிருந்தார்.
News December 8, 2025
பாதி கிணறு மட்டுமே கடந்துள்ளோம்: மு.க.ஸ்டாலின்

SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ எனும் தலைப்பில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விடுபட்ட தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திமுகவினர் மும்முரமாக பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.


