News February 15, 2025
காவல்நிலையப் பணிகளில் அதிக பெண் போலீஸ்

காவல்நிலையப் பணிகளில் அதிக பெண் போலீசை ஈடுபடுத்தும்படி, அனைத்து மண்டல காவல் அதிகாரிகளுக்கும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், புகார்களைப் பெறவும், முறையாக கையாளவும் மகளிர் போலீசே சரியாக இருப்பர், இதற்கு ஏதுவாக கேம்ப் அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர் போலீசை இப்பணியில் ஈடுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 6, 2025
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!

*மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் *வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக, மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள் *அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது *மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது
News December 6, 2025
சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடக்கம்

புத்தக வாசிப்பாளர்களின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சி ஜன.7-ல் தொடங்கும் என பபாசி அறிவித்துள்ளது. வழக்கம்போல, நந்தனம் YMCA மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. மொத்தமாக 13 நாட்கள் என ஜன.19-ம் தேதி வரை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
உலக சாதனை படைத்த நிதிஷ் குமார்

உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) பிஹார் CM நிதிஷ் குமார் இடம்பிடித்துள்ளார். பிஹார் தேர்தலில் வெற்றிபெற்று, அவர் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றதை அங்கீகரித்து அவரது பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கருத்து வேறுபாடு காரணமாக அவர், பலமுறை ராஜிநாமா செய்திருந்தாலும் மீண்டும் RJD அல்லது BJP உடன் கூட்டணி அமைத்து CM அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


