News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News November 15, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சனிக்கிழமை இன்று (நவம்பர் 15) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறைக்குரிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2025

ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

image

அம்மையநாயக்கனூரில் 2007ஆம் ஆண்டு நடந்த பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த அழகுமலை (54) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர் பிணையில் வெளிவந்த அவர், 18 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடியாணை (வாரண்ட்) பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அழகுமலையை கைது செய்து, நீதிமன்றக் காவலில் ஒப்படைத்தனர்.

News November 15, 2025

திண்டுக்கல்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ATM-ல் பணம் எடுக்க செல்லும்போது, முன்பின் தெரியாத அந்நிய நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறியாத நபர்கள் ஏமாற்றி பணத்தை திருடும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!