News March 17, 2024
ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News January 2, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

திண்டுக்கல், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 2, 2026
திண்டுக்கல் வரும் CM ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.7ம் தேதி திண்டுக்கல் வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அரசு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேடை, முதல்வர் வாகனம் வரும் பாதை, பொதுமக்கள் அமரும் இடம், வாகன நிறுத்தும் இடம் ,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.
News January 2, 2026
ஆயக்குடியில் தெரு நாய் கடித்து இரண்டு பேர் காயம்

ஆயக்குடி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாகி வருகிறது. இன்று மதியம் 1 மணி அளவில் இரண்டு பேரை நாய் கடித்து குதரி உள்ளது. காயமடைந்த அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையை பெற்று வருகின்றனர். உச்ச நீதி மன்றம் உத்தரவுப்படி தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது


