News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News January 10, 2026

சீல் வைக்கப்பட்ட கடைகளால் பழனியில் பரபரப்பு!

image

பழநி ரெட் கிராஸ் ரோட்டில் உள்ள கட்டடத்தில் கடைகள் வீடுகள் உள்ளன.இதற்கு 10 ஆண்டுகளாக வரி செலுத்த வில்லை. இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் கட்டடத்திற்கு வரிபாக்கி குறித்த நோட்டீஸ் ஒட்டி அதில் உள்ள கடைக்கு சீல் வைத்தனர்.நகராட்சி கமிஷனர் அறிக்கையில்,நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி,தொழில் வரி குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்தி சட்ட ரீதியான நடவடிக்கை தவிர்க்க கேட்டுள்ளார்.

News January 10, 2026

திண்டுக்கல் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

வடமதுரை அருகே பயங்கரம்!

image

வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள தென்னை மட்டை கயிறு திரிக்கும் ஆலையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் இயந்திரங்கள் மற்றும் கயிறுகள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!