News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News December 27, 2025

நிலக்கோட்டை அருகே தலைநசுங்கி பலி!

image

நிலக்கோட்டை: பட்டிவீரன்பட்டி அடுத்த நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 65). பூ வியாபாரியான இவர், இன்று தனது சைக்கிளில் அய்யம்பாளையத்தில் இருந்து நெல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாகச் சைக்கிள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய முனியசாமி, தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 26, 2025

திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

image

திண்டுக்கல், வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே இன்று திண்டுக்கல் – வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 26, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் மாதம் ரூ.13,000!

image

திண்டுக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 10.01.2026 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!