News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News December 24, 2025

இருளில் மூழ்கிய திண்டுக்கல்!

image

திண்டுக்கல் பஸ் ஸ்டாடண்ட், முக்கிய ரோடுகளை தவிர புறநகர் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது. குறிப்பாக சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி என பல இடங்களில் தெரு விளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. விளக்குகள் அமைத்து போதிய வழிகாட்டல் பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News December 24, 2025

வேடச்சந்தூர் அருகே விபத்து

image

கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் விவசாயி சுப்பிரமணி (70). திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள எத்திலாம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார். கரூர்-திண்டுக்கல் ரோடு தனியார் ஓட்டல் முன்பு சாலையை கடக்கும் போது பின்னால் வந்த கார் மோதி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!