News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News September 4, 2025

பழனி கோயிலில் பூஜை நேரம் மாற்றம்!

image

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற செப்.7ஆம் தேதி தங்கரத புறப்பாடு, ராக்கால பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9:00 மணிக்கு நடைபெறும். செப்.7 அன்று இரவு 9:57 மணி முதல் நள்ளிரவு 1:26 மணி வரை பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.

News September 4, 2025

திண்டுக்கல்: ராதாகிருஷ்ணன் விருது!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர் விருது) ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, சிறந்த சேவையை வழங்கிய ஆசிரியர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும், 2025ஆம் ஆண்டில், இந்த விருதிற்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News September 3, 2025

திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 04-09-2025 வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், வடமதுரை ராஜ் மஹால், , நிலக்கோட்டை மேட்டுப்பட்டி ஆஞ்சிநேயா மஹால், எஸ். நத்தம் கோட்டையூர் மந்தை திடல், பழனி எரமநாயக்கன்பட்டி வி.பி.ஆர்.சி கட்டிடம், சாணார்பட்டி இராமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

error: Content is protected !!