News March 17, 2024
ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News November 26, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் நாளை (நவ.27) கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார். உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் (ம) அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. எனவே, இம்முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News November 26, 2025
வேடசந்தூர் அருகே கோர விபத்து

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.
News November 26, 2025
வேடசந்தூர் அருகே கோர விபத்து

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.


