News March 17, 2024

ஒட்டன்சத்திரம் அருகே கடமான் பலி

image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பபிள்ளைபட்டி கிராமத்திலுள்ள பெரியசாமியின் தோட்டத்தில் நேற்று ஆண் கடமான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வனப்பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கடமானின் உடலை மீட்டு பின்னா் விருப்பாட்சி கால்நடை மருத்துவா் சரவணபவா கடமானை உடற்கூறாய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News November 27, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News November 27, 2025

நத்தம் அருகே நேர்ந்த சோகம்!

image

நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது, பின்னால் சின்ன மலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் விசாரிக்கிறார்.

News November 27, 2025

திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!