News April 12, 2025

மாதம் ₹5000 உதவித்தொகை: உடனே அப்ளை பண்ணுங்க

image

PM INTERNSHIP திட்டத்தின் கீழ், வேலைதேடும் இளைஞர்களுக்கு, டாப் 500 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, மத்திய அரசு பயிற்சி அளித்துவருகிறது. மேலும், மாதம் ரூ.5,000-யும், ஒருமுறை ரூ.6,000 உதவித் தொகையையும் அளிக்கிறது. இந்த திட்டத்திற்கு <>விண்ணப்பிக்க<<>> வருகிற 15-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. இந்த அவகாசம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே உள்ளன. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News December 10, 2025

ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

image

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 10, 2025

3 EX அமைச்சர்கள்.. EPS-க்கு ஷாக் கொடுக்க போகும் KAS

image

வரும் 18-ம் தேதி ஈரோட்டிற்கு விஜய் வரும்போது, சில அதிமுக EX அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, கொங்கு மண்டலத்தில் EPS மீது அதிருப்தியில் இருக்கும் 2 EX அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு EX அமைச்சர் என மூவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது EPS-க்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

News December 10, 2025

இது என்னடா சோழர் கோயிலுக்கு வந்த சோதனை!

image

பெங்களூருவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர் காலத்து சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு, இனிமே இளம்ஜோடிகளுக்கு திருமணமே செய்து வைக்க கூடாது முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு தெரியாமல் போலியான ஆவணங்களை தயாரித்து ஜோடிகள் திருமணம் செய்வதாகவும், இதனால் அவர்களது பெற்றோர்கள் கோர்ட்டை நாடுவதால், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள் கோர்ட்டே கதி என்ற அலைகின்றனர். அதனால் தான் இந்த முடிவாம்.

error: Content is protected !!