News February 16, 2025
மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால்டிக்கெட்

நாடு முழுவதும் 9- 12ஆம் வகுப்பு வரை சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் மட்டும் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு பிப்.22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நாளை (பிப்.17) ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
Similar News
News August 26, 2025
சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News August 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: குற்றங்கடிதல்
குறள் எண்: 439
குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.
News August 26, 2025
ராகுல் பெரும் பொய்யர்: தேவேந்திர பட்னாவிஸ்

வாக்கு திருடப்பட்டதாக ராகுல் காந்தி கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் பெரும் பொய்யைகள் பேசி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையான பொய்யர்கள் பாஜகவில்தான் இருப்பதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் திருட்டு அமைச்சர் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.