News April 20, 2024

கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்

image

நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும், கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

₹4 கோடிக்கு கார் வாங்கிய அர்ஷ்தீப்!

image

இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், மெர்சிடஸ் பென்ஸ் AMG G63 Wagon மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். 585 குதிரை திறன் கொண்ட இந்த காரின் விலை ₹4 கோடியாகும். இது, 0-100 kmph வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டும். அர்ஷ்தீப்பின் பவுலிங் வேகத்தை போன்றே காரை வாங்கியுள்ளதாக, நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News November 12, 2025

AI கேர்ள் ஃபிரண்ட்களுடன் எச்சரிக்கையாக இருங்கள்!

image

AI கேர்ள் ஃபிரண்ட்கள், Anime-Style சாட்பாட்களுடன் எச்சரிக்கையாக இருக்குமாறு Perplexity AI CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். மனிதர்களுடன் உறவுகளை மேம்படுத்த சில AI நிறுவனங்கள் சாட்பாட்களை உருவாக்குகின்றன. அதனுடன் உரையாடும் அனைத்தையும் அவை ஞாபகம் வைத்துக் கொள்ளும். அதனுடன் ஆழமான உறவை பேணுவது மனிதர்களின் சிந்தனையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News November 12, 2025

வரலாற்று சிறப்புமிக்க பிஹார் தேர்தல்: EC

image

பிஹார் தேர்தலானது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று EC ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக நடந்த SIR-ல் 7.5 கோடி வாக்காளர்கள், அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய 1,76,000 பூத் ஏஜென்ட் பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தல் பணியாளர்களின் அயராத முயற்சியால், பிஹாரில் உள்ள 38 மாவட்ட நீதிமன்றங்களில் SIR-க்கு எதிராக ஒற்றை புகார் கூட முறையீடு செய்யப்படவில்லை என்று பேசியுள்ளார்.

error: Content is protected !!