News March 14, 2025
மீண்டும் EL-க்கு பணம்.. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

<<15756270>>அரசு ஊழியர்கள்<<>> ஈட்டிய விடுப்பு (EL) சரண் செய்து பணமாக பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2025
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் கால்குலேட்டர் அனுமதி

12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும். தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணாக்கர்கள் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிபிஎஸ்இயின் இந்த முடிவால் மாணவர்கள் அனைவரும் பயனடைவர் எனக் கூறப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.
News March 14, 2025
மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி காலமானார்

மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர். அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகாேதரி ஆவார்.
News March 14, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிசன்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.