News March 14, 2025

மீண்டும் EL-க்கு பணம்.. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

image

<<15756270>>அரசு ஊழியர்கள்<<>> ஈட்டிய விடுப்பு (EL) சரண் செய்து பணமாக பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Similar News

News July 4, 2025

PMK கொறடா பொறுப்பிலிருந்து நீக்க முடியாது: MLA அருள்

image

பாமக கொறடா பொறுப்பிலிருந்து MLA அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் G.K.மணி அனுமதியில்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து தன்னை நீக்க முடியாது என்றும், கொறடாவாக எம்.எல்.ஏ. அருளே தொடருவார் என GK மணி அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் தான் வழங்கயுள்ளதாகவும் MLA அருள் தெரிவித்தார்.

News July 4, 2025

FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

image

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <>www.nta.ac.in<<>> இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண், Password-ஐ பதிவிட்டு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 13.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

News July 4, 2025

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

image

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!