News October 3, 2025
பணம் வந்திருச்சு.. வாழ்க்கை போயிருச்சு!

சேமித்தால் பிற்காலத்தில் நிம்மதியாக வாழலாம் என நம்பியவர், ₹4 கோடி சேர்த்தாலும், நிம்மதி இன்றி தவிக்கிறார். ஜப்பானை சேர்ந்த சூசுகி(67), வாழ்வில் ஒன்றுமே அனுபவிக்கவில்லை. தற்போது மனைவி இறந்துவிட, அவருடன் நல்ல ஹோட்டலுக்கு கூட போனதில்லை என வருந்துகிறார். பிள்ளையுடன் அவருக்கு சந்தோஷமான நினைவுகளே இல்லையாம். சிக்கனமாக இருந்து வாழ்க்கையை தொலைத்ததாக புலம்புகிறார். இந்த விஷயத்தில் நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News October 3, 2025
BREAKING: IG அஸ்ரா கர்க் தலைமையில் SIT அமைப்பு

கரூர் துயர சம்பவத்தில், வடக்கு மண்டல IG அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு(SIT) அமைத்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் SP-யுடன் கூடுதலாக ஒருவரை இணைத்து இந்த சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
News October 3, 2025
அணில்களுக்கு அறிவில்லை: ஓவியா பதிலடி

ARREST VIJAY என <<17852904>>ஓவியா ஸ்டோரி<<>> வைத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர் விஜய் ரசிகர்கள். இதனால் கடுப்பான ஓவியா மீண்டும் ஒரு ஸ்டோரியை வைத்து, டெலீட் செய்துள்ளார். அணில்களுக்கு அறிவில்லை என்பது போல ஒரு போட்டோவை அவர் பகிர்ந்ததால் மீண்டும் அவரை தாக்கிவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், ஓவியாவை தகாத வார்த்தைகளில் திட்டுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News October 3, 2025
சோறு வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள்

சோறு வடித்த கஞ்சியின் நன்மைகள் தெரிந்தால், அதை இனிமே கீழே ஊத்தமாட்டீங்க. *உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை கட்டாயம் குடிக்க வேண்டும். *இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. *சோறு வடித்த கஞ்சி உடல் உஷ்ணத்தை குறைக்கும். *இதில் வைட்டமின்கள் பி1, பி2,பி6, ஈ ஆகியவை உள்ளன. *தினமும் 1 டம்ளர் கஞ்சியை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.