News April 4, 2025
மோடியின் இலங்கை பயணம்.. 11 மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News August 20, 2025
BREAKING: அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News August 20, 2025
பயந்து ஓடிய நேதாஜி..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை

ஆங்கிலேயர்களுக்கு பயந்து நேதாஜி ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக, கேரள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று பிழை இடம்பெற்றதாகவும், இதை அறிந்த உடன், பிழையை நீக்க உடனே உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். உண்மையில், ஆங்கிலேயரை விரட்டவே ஜெர்மன் சென்று ஹிட்லர் உதவியை நேதாஜி நாடினார்.
News August 20, 2025
தர்பார் தோல்விக்கு இதுதான் காரணம்: ARM ஓபன்டாக்

‘தர்பார்’ கதையை மிக சீக்கிரமாக எழுதியது அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். முதலில் அப்பா – மகள் கதையாக இருந்ததாகவும், நயன்தாரா படத்திற்குள் வந்தவுடன் கதையின் போக்கு முற்றிலுமாக மாறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.