News April 4, 2025

மோடியின் இலங்கை பயணம்.. 11 மீனவர்கள் விடுதலை

image

தமிழக மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 3, 2025

பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

image

வரும் டிச.6-ம் தேதி, புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாவார். இதனால் பின்வரும் 3 ராசியினர் அதிக நன்மைகள் பெறுவர்: *விருச்சிகம்- பணியில் பதவி, சம்பள உயர்வு, தொழிலில் லாபம் கிடைக்கும். *திருமண வாழ்க்கை சிறக்கும். *மகரம்- வருமானம் கணிசமாக அதிகரிக்கும், தொழிலில் லாபம் கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உண்டு. *கும்பம்- வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.

News December 3, 2025

இலவச லேப்டாப் திட்டத்தில் குளறுபடி: நயினார்

image

தமிழகத்தில் பல லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், வெறும் ₹10 லட்சம் பேருக்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என கேட்ட அவர், பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் எனவும் சாடியுள்ளார். தேர்தலுக்காக அதிமுகவின் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 3, 2025

பள்ளிகளுக்கு விடுமுறை.. 2-வது மாவட்டமாக அறிவிப்பு

image

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, நாளை <<18461242>>சென்னையில்<<>> பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

error: Content is protected !!