News May 22, 2024
மோடியின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது

பொய்யான வழக்குகள் மூலம் அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதையே பாஜக செய்து வருவதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். ஜார்க்கண்டில் பேசிய அவர், “ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைத்திருப்பார், ஆனால், அதை ஹேமந்தின் மனைவி முறியடித்துள்ளார்” என்றார். ஹேமந்த சோரன் சிறைக்கு சென்ற பிறகு, அவரின் மனைவி கல்பனா அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
Similar News
News March 4, 2026
மறந்துக்கூட வீட்டில் லட்சுமி படத்தை இங்க வெச்சுராதீங்க!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் லட்சுமியின் படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு திசையில் இருந்து தெற்கு பார்த்தபடி வைக்க வேண்டுமாம். அதுவே, மங்களகரமானது என சொல்லப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் இருக்கும் லட்சுமி படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை உள்ளது. தவறுதலாக கூட வடக்கு பார்த்தபடி வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
News March 4, 2026
சிக்கலில் நவாஸ் கனி MP

2019 & 2024 MP தேர்தல்களின் போது நவாஸ் கனி, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஒப்பிட்டதில் அவர் வருமானத்தை மறைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வழக்கின் விசாரணையில், ₹18 கோடி அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகவும், ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகவும் சென்னை HC கூறியது. அவரது வருமான விவரங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்ட நிலையில், ஆதாரங்களின்படி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுப்பதாக IT உறுதியளித்தது.
News March 4, 2026
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்.,?

திமுக – காங்., கூட்டணியை உறுதிப்படுத்த இறுதியாக ப.சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 40+ கேட்ட தொகுதிகளை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம். இதனால், வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக காங்., விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


