News June 17, 2024

நாளை 17ஆவது தவணை ₹2000-ஐ விடுவிக்கிறார் மோடி

image

வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலா ₹2000 தொகையை பெறுவார்கள். மேலும், கிருஷி சாகிஸ் பயிற்சி அளிக்கப்பட்ட 30,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

Similar News

News April 8, 2026

எங்களை ஒன்று சேர்த்தது அமித்ஷா தான்: TTV

image

தங்களை ஒன்று சேர்த்தது பாஜகதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதிமுக & அமமுகவுக்குள் அண்ணன் – தம்பி, மாமன் – மச்சான், பங்காளி சண்டைதான் இருந்தது. அதை தீர்த்து வைத்தவர் அமித்ஷா தான் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

News April 8, 2026

FLASH: கடலூரில் கால் பதிக்கும் விஜய்!

image

கடலூரில் நாளை தேர்தல் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஞ்சை நகர் மைதானத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூரில் விஜய் வேனில் இருந்தவாரே பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், தவெகவினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர். இன்று நெல்லையில், விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளது கவனிக்கத்தக்கது.

News April 8, 2026

கட்டிப்பிடிப்பதும் அன்பு தான்: கியாரா அத்வானி

image

சாரா அர்ஜுனின் தோளில் ராகேஷ் பேடி(71) முத்தமிட்டது வைரலாகி நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளானது. இதற்கு தந்தை-மகள் பாசத்தின் வெளிப்பாடு என ராகேஷ் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்வில் கட்டிப்பிடிக்க தயங்கிய ராகேஷை கியாரா அத்வானி கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினார். இதனையடுத்து, ஒரு வரைமுறை இல்லாமல் கிசுகிசுக்கக்கூடாது; கட்டிப்பிடிப்பது என்பது அன்பின் வெளிப்பாடுதான் என்றார்.

error: Content is protected !!